search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defeat"

    • நான் சாதாரண கிளைக்கழக செயலாளராக என்னுடைய சிலுவம்பாளையத்தில் பணியாற்றினேன். இன்றைய தினம் உங்களுடைய ஆதரவோடு அ.தி.மு.க.வுடைய இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன்.
    • தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை முடக்க நினைக்கின்றார்.

    சேலம்:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனி சாமி முதன் முதலாக தனது சொந்த மாவட்டத்திற்கு வந்தார். அவர் தலைவாசல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நின்று அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது-

    அ.தி.மு.க. வலுமையாக வும், திறமையாகவும், வேகமாகவும் வளர்ச்சி அடைய நாடு பாடுபடு வேன். அ.தி.மு.க. மிகப் பெரிய இயக்கம். நான் சாதாரண கிளைக்கழக செயலாளராக என்னுடைய சிலுவம்பாளையத்தில் பணியாற்றினேன். இன்றைய தினம் உங்களுடைய ஆதரவோடு அ.தி.மு.க.வுடைய இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளேன்.

    தி.மு.க.வில் வாரிசு முறையில் தலைவர் ஆகிறார்கள். முதலில் கருணாநிதி, ஸ்டாலின், பிறகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தான் தலைவராக வர முடியும்.

    ஆனால் சாதாரண தொண்டனாக இருந்து அ.தி.மு.கவில் உட்சபட்ச பதவியான பொதுச் செயலாளராக ஆக முடியும். நான் 4 ஆண்டுகள் 2 மாதம் ஆட்சி காலத்தில் இருந்தேன். நான் முதல்- அமைச்சராக பார்க்கவில்லை. உங்களை எல்லாம் முதல்-அமைச்சராக நான் பார்த்தேன்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை முடக்க நினைக்கின்றார். ஸ்டாலின் அவர்களே உங்களை போல் ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க. தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது. எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் இளை ஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அ.தி.மு.க. அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் எதிரிக்கு சாதகமாகி விட்டது.

    ஆனால் சூதாட்டத்தை தடை செய்ய அதற்கு ஒரு கமிஷம் தி.மு.க. அமைத்துள்ளது. இதுவரை 37 கமிஷன்கள் அமைத்து ஒரே சாதனை படைத்த அரசாங்கம் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம். எல்லாத்துக்கும் குழு தான். குழு போட்டால் உடனே முடிந்து போச்சு. ஸ்டாலின் அரசாங்கம் குழு அரசாங்கம். அந்த குழு குடும்ப அரசாங்கமாக இருக்கிறது. மக்கள் அரசாங்கமாக இல்லை. பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?.

    இதையெல்லாம் விட்டு விட்டு இன்றைக்கு யாேரா சொல்வதை கேட்டுவிட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் இப்படி 37 குழு அமைத்ததில்லை. பொம்மை முதல்-அமைச்சர் என்பது ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கிறது. நாங்கள் போட்ட திட்டத்தை திறந்து வைத்து, போட்டோ எடுக்கிறது தான் அவருடைய வேலை. இந்த ஒரு வருடமாக இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.100 சதவீதம் வீட்டு வரியை உயர்த்திய ஒரே அரசாங்கம் தி.மு.க. தான். இதற்கு முடிவு கட்டும் விதமாக அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற உழைப்போம். வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார்.

    மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர் கோல்ஸ்கிரீபர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை எனது பயிற்சியாளருடன் இணைந்து கொண்டாடுவேன். எனக்கு நிறைய வாழ்த்து செய்திகள் வந்து இருக்கின்றன’ என்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 26-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி, குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு நவோமி ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடர்ச்சியாக 11-வது வெற்றியை ருசித்த பெலின்டா பென்சிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோசோவாவிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என்று முன்னாள் கேப்டன் மொயின்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MoinKhan #2019WorldCup
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும். அந்த அளவுக்கு எங்கள் அணி வீரர்களிடம் திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கிலாந்தில் 2 வருடத்திற்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் எங்கள் அணியினர் இந்திய அணியை வீழ்த்தினார்கள். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். எங்கள் அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது.

    கடந்த பல வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி நன்றாக செயல்பட்டு வருகிறது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நிலவும் வானிலையை கணிக்க முடியாது. ஆடுகளம் ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். இவையெல்லாம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அம்சமாகும்.

    எங்கள் அணி வீரர்கள் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு நாங்கள் உலக கோப்பை போட்டிக்கு செல்வது நல்ல விஷயமாகும். கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை சிறுவயது முதல் எனக்கு தெரியும். தற்போது பாகிஸ்தான் அணியை வழிநடத்த அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை.

    இவ்வாறு மொயின்கான் கூறினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-இந்தியா அணிகள் இதுவரை 6 முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றது இல்லை. வரும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் ஜூன் 16-ந் தேதி லீக்கில் மோதுகின்றன.  #MoinKhan #2019WorldCup

    புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 15-16 என்று நெருங்கி வந்த தமிழ் தலைவாஸ் அணி பிற்பாதியில் இரண்டு முறை ஆல்-அவுட் ஆனதால் பின்தங்கி போனது. பாட்னா அணியில் கேப்டன் பர்தீப் நார்வல் ரைடு மூலம் 13 புள்ளிகள் சேர்த்தார்.

    இதன் மூலம் தொடக்க லீக்கில் தமிழ் தலைவாசிடம் அடைந்த தோல்விக்கும் அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. 13-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-35 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

    இன்றைய ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.  #ProKabaddi #PatnaPirates #TamilThalaivas 
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் கோபின் அதிர்ச்சிகரமாக தோற்றார். #FrenchOpen #DavidGoffin
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தற்போது தர வரிசையில் 20-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரர் ஸ்வேரேவ் (ஜெர்மனி), 7-வது வரிசையில் உள்ள டொமினிக் தியம் (ஆஸ்ரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். இருவரும் கால் இறுதியில் மோதுகிறார்கள்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் கோபின் (பெல்ஜியம்) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இத்தாலியை சேர்ந்த மார்கோ சேச்சினடோ 7-5, 4-6, 6-0, 6-3 என்ற கணக்கில் 8-ம் நிலை வீரான கோபினை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), யூலியா புடின் சேவா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெறும் 4-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்)- மேக்சிமிலன் மார்ட்டரர் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா)- பேபியோ போகினி (இத்தாலி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா)- இஸ்னர் (அமெரிக்கா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா)-டியாகோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள்.

    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ‌ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹெலப் (ருமேனியா)- மெர்டன்ஸ் (பெல்ஜியம்), முகுருஜா (ஸ்பெயின்)- லெசியா (உக்ரைன்), கெர்பர் (ஜெர்மனி)-கார்சியா (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.

    இதேபோல் நேற்று பாதியில் நிறுத்தப்பட்ட வோஸ்னியாக்கி மோதும் ஆட்டமும் இன்று நடக்கிறது.#FrenchOpen #DavidGoffin
    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் ரபெல் நடால் 7-ம் நிலை வீரரான டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.#MadridOpen #Nadal
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். இதன் மூலம் களிமண் தரை ஆடுகளத்தில் நடால் தொடர்ச்சியாக 50 செட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு ஆடுகளத்தில் தொடர்ச்சியாக அதிக செட்டுகளை வென்றவர் என்ற சிறப்பை நடால் பெற்றார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜான்மெக்கன்ரோ தரைவிரிப்பு ஆடுகளத்தில் (கார்பெட்) தொடர்ந்து 49 செட்டுகளை வென்றதே சாதனையாக இருந்தது. அவரது 34 ஆண்டு கால சாதனையை நடால் முறியடித்து இருக்கிறார்.

    நடால் நேற்று கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். இதில் நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா கார்சியாவை (பிரான்ஸ்) வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.#MadridOpen #Nadal
    ×