என் மலர்
புதுச்சேரி

சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய காட்சி.
யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி
- புதுவை மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது.
- சங்கத் துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார்.
புதுச்சேரி:
சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுவை மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது.
சங்கத் துணை செயலாளர் டாக்டர் பாலாஜி வரவேற்றார். சங்க பொது செயலாளர் தயாநிதி தேசிய யோகா விளையாட்டு போட்டி பற்றி விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இதில் நேரு எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு துணைத்தலைவர் மற்றும் சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்தபாலயோகி பவனானி ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவ- மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக மூத்த சங்கத் துணைத் தலைவர் கஜேந்திரன், துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்கப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர் செந்தில் குமார் மற்றும் லலிதா சண்முகம் கலந்துக் கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் யோகா நடுவர்கள் கவுரவி க்கப்பட்டனர்.முடிவில் சங்க துணை செயலாளர் சதிஷ் குமார் நன்றி கூறினார்.