search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees"

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட விக்ரம் என்ற பகுதியில் வருவாய் ஆய்வாளர் மாதவி தலைமையில் வடகிழக்கு பருவம ழையை மேற்கொ ள்வது பற்றிய கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்காடி பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைகள் மற்றும் நிறைகளை பற்றி தங்களது கருத்துக்களை கருத்துக்களை எடுத்து கூறினர்.

    இதை அடுத்து அதற்குரிய அதிகாரிகளிடம் முறையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • பாலிசிதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக த மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 ஜிஏஜி பாலிசிகளும், 4576 ஐபிபிபி கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை ரூ.1 கோடியே 34 லட்சத்து 55 ஆயிரத்து 552 -ம் , 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கபட்டனர். முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • மதுரையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • ஒப்பந்த முறையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தை உள்ளடக்கிய விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பி.பி.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பா ளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே. நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியா புரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதி களில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் நூற்றுக்க ணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கரிசல்குளத்தில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை மாநகராட்சியில் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்திருந்தது. அதன்படி தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மேலும் வேலை பார்ப்பதற்கு சரியான ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ., பி.எப்.ஆகிய வற்றிற்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணம் செலுத்தா மல் இருந்தது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் மண்டலம் 2-ல் தூய்மை பணியில் ஈடுபட தனியார் நிறுவ னத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி யது. தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும், மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் தொகுப்பு ஊழி யர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும், 18 வருடமாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாளை மாநகராட்சி அனைத்து மண்டலங்களி லும் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.

    முன்னதாக நடந்த போராட்டத்தை முன்னிட்டு காவல் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆயுதப்படை போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர்மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு தெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

    சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

    சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மேலாண்இயக்குனர் கூற அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் 13ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

    ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார அளவில் பணி புரிபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

    • நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
    • ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கவேல் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு 41 மாத பணி நீக்ககாலத்தை ஓய்வூதியத்திற்கு பொறுந்தும் வகையில் முறைப்படுத்த வேண்டும்.இறந்த சாலை பணியாளர்களுக்கு விதிமுறையை தளர்த்தி வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் செய்த வேலைக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத தையும் கண்டித்தும், பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு ஒன்றிய கவுரவ தலைவர் பெத்தபெருமாள் ஒன்றிய சங்க தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி துணை செயலாளர் காந்தி, சங்க மாவட்ட தலைவர் சாந்தகு மார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • வட்டாட்சியரை இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.
    • ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளக்கு றிச்சி வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இப்போ ராட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், தனித்துணை வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் அலவலகம், உள்ளிட்ட அனைத்து வரு வாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
    • தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கி ரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது.அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின்பிற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம்முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தனிதாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலக ம் உள்ளே சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்ததுணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வருவாய்த் துறை அதிகாரிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினர்.

    ஆனால் அதனை மீறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்க ளுக்கும் போலீசா ருக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் வருவாய்த்து றை அதிகாரிகள் கேட்டை தள்ளி திறந்து உள்ளே புகுந்தனர். அதன்பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகஅறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 149 பேரை போலீசார் நேற்று இரவு 8 . 30 மணியளவில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்பு நள்ளிரவு 12 மணியளவில் அனைவரும் விடுவிக்க ப்பட்டனர். இவ்வாறு கள்ளக்குறிச்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையினர் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுப டட்டனர். கள்ளக்கு றிச்சி யிலும் இன்று வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதனால் மாவட்ட ங்களில் உள்ள தாலுக்கா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தில் அதிகாரிகள் பணிக்கு வந்தும் எவ்வித பணிகளும் நடைபெற வில்லை. இதனால் பொது மக்கள்ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாரின் இடைக்கால பணிநீக்க த்தைரத்து செய்ய வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை கைது செய்த நடவடி க்கைகளை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியன் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று (புதன்கிழமை)காலை 10 மணிக்கு திட்டக்குடி வருவா ய்த்து றை அலுவ லர்கள் வருகை பதிவேட்டில் கை யொப்ப மிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்" உள்ளி ட்ட அனைத்து பணிகளையும் 100 சதவீதம் புறக்கணிப்பு செய்து திட்டக்குடி தாசில்தார் ரத்னகுமார், துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் தாசில்தால் அலுவலகம் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போரா ட்டம் நடத்தி னர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின.

    • கூட்டுறவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைச்சாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    கடந்த 5 ஆண்டுகளாக ஊதியமின்றி அல்லல் படும் கூட்டுறவு வீட்டு வசதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதற்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை மற்ற சங்கங்களோடு இணைத்து ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும். வீட்டு வசதி சங்கத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் நலிவுற்ற சங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி ஓய்வு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பொதுப்பணி மாறுதல் திட்டத்தினை வகைபடுத்த வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், காங்கேயம் வட்டக் கிளை செயலாளர் கதிரவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை புள்ளியியல் அலுவலர் பெரியசாமி உட்பட அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

    திருவாரூர்:  

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்,காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். புதிய சுமை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×