search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி, கள்ளக்குறிச்சியில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பணிகளைபுறக்கணித்து காத்திருப்பு போராட்டம்
    X

    திட்டக்குடி, கள்ளக்குறிச்சியில் தாலுகா அலுவலக ஊழியர்கள் பணிகளைபுறக்கணித்து காத்திருப்பு போராட்டம்

    • அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
    • தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கி ரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது.அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின்பிற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம்முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தனிதாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலக ம் உள்ளே சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்ததுணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வருவாய்த் துறை அதிகாரிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினர்.

    ஆனால் அதனை மீறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்க ளுக்கும் போலீசா ருக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் வருவாய்த்து றை அதிகாரிகள் கேட்டை தள்ளி திறந்து உள்ளே புகுந்தனர். அதன்பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகஅறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 149 பேரை போலீசார் நேற்று இரவு 8 . 30 மணியளவில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்பு நள்ளிரவு 12 மணியளவில் அனைவரும் விடுவிக்க ப்பட்டனர். இவ்வாறு கள்ளக்குறிச்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையினர் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுப டட்டனர். கள்ளக்கு றிச்சி யிலும் இன்று வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதனால் மாவட்ட ங்களில் உள்ள தாலுக்கா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தில் அதிகாரிகள் பணிக்கு வந்தும் எவ்வித பணிகளும் நடைபெற வில்லை. இதனால் பொது மக்கள்ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாரின் இடைக்கால பணிநீக்க த்தைரத்து செய்ய வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை கைது செய்த நடவடி க்கைகளை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியன் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று (புதன்கிழமை)காலை 10 மணிக்கு திட்டக்குடி வருவா ய்த்து றை அலுவ லர்கள் வருகை பதிவேட்டில் கை யொப்ப மிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்" உள்ளி ட்ட அனைத்து பணிகளையும் 100 சதவீதம் புறக்கணிப்பு செய்து திட்டக்குடி தாசில்தார் ரத்னகுமார், துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் தாசில்தால் அலுவலகம் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போரா ட்டம் நடத்தி னர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின.

    Next Story
    ×