search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், காங்கேயம் வட்டக் கிளை செயலாளர் கதிரவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை புள்ளியியல் அலுவலர் பெரியசாமி உட்பட அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    Next Story
    ×