search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்பாட்டம்"

    • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களில் எழுப்பினார்கள்.

    திருவாடானை

    திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகு தியில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத் தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தாலுகா தலைவர் அருள்சாமி தலை மையில் மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செய லாளர் சேதுராமன், தாலுகா பொருளாளர் நாகநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை வழங்க வேண்டும், வேலைக்கான சம்பளத்தை 15 நாட்களுக் குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை திட்டத்தில் பணி செய்பவர்க ளுக்கு 100 நாட்கள் வேலை தருவதை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டன கோஷங்களில் எழுப்பி னார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் ரத்தி னம், முருகன், சகாயமாதா, சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம்
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    கடலூர்:

    தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வே ண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவ ர்களைக் கொண்டு ஆசிரி யர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும், தொடக்கக்கல்வி மாணவ ர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும், எமிஸ் இணையதளத்தில் தேவை யற்ற பதிவுகளை மே ற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது, காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும், காலை உணவுத் திட்டப் பணியிலி ருந்து தலைமை ஆசிரியர்க ளையும், ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிக ளையும் சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்க வேண்டும் போன்ற 6 அம்ச கோரிக்கை களை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடந்த து. இந்த ஆர்ப்பாட்டம் பண்ரு ட்டி வட்டார கல்வி அலுவல கம் முன்பு நகர தலைவர் கீதா தலைமையில், ஏழும லை, சாந்தகுமார், முன்னி லையில் நடைபெற்றது. தொடர்ந்து நகர செயலாளர் உமா வரவேற்று பேசினார். வட்டாரச் செயலாளர் சாந்தகுமார் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட துணைசெயலாளர் நாராயணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் வட்டாரப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார். 

    • ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதை எதிர்த்து அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் கடை வீதியில் அமைந்துள்ள சகஜானந்தா சிலை அருகில் சிவன் குலத்தார் அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள காகிதப்பட்டறைஊராட்சியில்பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர்அங்கிருந்த ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதைஎதிர்த்து சிவன் குலத்தார் அறக்கட்ட ளை நிர்வாகிகள் கையில் அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில்மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் இள வரசன், சரவணன், மோகன், ஜெயபால் மற்றும்10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், காங்கேயம் வட்டக் கிளை செயலாளர் கதிரவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை புள்ளியியல் அலுவலர் பெரியசாமி உட்பட அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • மணிப்பூர் கலவரம் கண்டித்து நடந்தது
    • கோஷங்கள் எழுப்பினர்

    ஆரணி:

    திருவண்ணமலை மாவட்டம் ஆரணி காந்தி சிலை அருகில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில்

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நகர தலைவர் பொன்னையன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜபாபு, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் மாவட்ட செயலாளர் உதயகுமார் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பிரபு, நிர்வாகிகள் மருத்துவர் வாசுதேவன், அசோக்குமார். பாபு, பிள்ளையார், குருமூர்த்தி, சம்பந்தம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.

     திருப்பூர்:

    தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி கூறியதாவது:-

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து வழங்கும் மையங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது. இதனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து மாத்திரைகளை பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். தமிழக அரசு உடனே தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
    • குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் சார்பில் நடை பெற்ற கவனஈர்ப்பு ஆர்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுமதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலையரசி, தமிழ்பிரியா, ரம்யா, விசா லாட்சி, மணிமேகலை, உமா ராணி, விஜயலட்சுமி ஆகி  யோர் முன்னிலை வகித்த னர். கடலூர் மாவட்ட தலை வர் மணித்தேவன் கலந்து கொண்டு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை களான பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

    வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு பொறுப்பாளருக்கான வயது வரம்பை 60 ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், சத்துணவு மையத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். முடிவில் மீனாட்சி நன்றி கூறினார் இதில் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமத்தின் சத்து ணவு பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சமையலர்கள், உதவியா ளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

    • அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்
    • நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்மா உணவகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அரிசியால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அறந்தாங்கியில் கண்டன ஆர்பாட்டம் ஒன்றியச் செயலாளர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் சி.பி.ஐ. மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், தேசியக்குழு உறுப்பினர் மாதவன், ஒன்றியத் தலைவர் குமார், இராதாகிருஷ்ணன், பெரியசாமி, அஜய்குமார்கோஷ், காமாட்சி, கணேசன், அழகுமன்னன், சுப்பிரமணியன், செல்வராஜ், முருகன், கருப்பையா, ராஜேந்திரன், பழனிவேலு, சேவுக பெருமாள், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விற்பனை மையத்தில் இரண்டுமுறை பில் பதிவு செய்வதை ரத்துசெய்யவேண்டும்.
    • மாதா மாதம் ஊதியத்திற்கென நிதி ஒதுக்கவேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதல் பொதுவினியோக த்திட்டத்திற்கென தனித்து றை உருவாக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கவேண்டும். விற்பனை மையத்தில் இரண்டுமுறை பில் பதிவு செய்வதை ரத்துசெய்யவேண்டும்.

    மாதா மாதம் ஊதியத்திற்கென நிதி ஒதுக்கவேண்டும். பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக்கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகிகள் முருகன் சுகதேவ், குமார் பாலகிருஷ்ணன், சண்முகம், பழனிச்சாமி, சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப் நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்குதல், பயணப்படி 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கால தமதமின்றி பணி வரன் முறை செய்தல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாதப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்குதல், பயணப்படி 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கால தமதமின்றி பணி வரன் முறை செய்தல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாதப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது.
    • சேதமான பயிர்களுக்கும், உயிர்இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகம் முன்பு பா.ஜ.க. எஸ்.டி. அணி சார்பில்யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    எஸ்.டி. அணியின் மாநில செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திப்பன் வரவேற்றார். இதில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நரேந்திரன், எஸ்.டி. அணி மாநில செயலாளர் சதீஷ்குமார், எஸ்.டி. அணியின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் வாழும் விவசாயிகள் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

    விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்கள் யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளால் தொடர்ந்து சேதமாகி வருகிறது. அதேபோல யானைகளால் தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். சேதமான பயிர்களுக்கும், உயிர்இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலை வர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசரெட்டி, மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், ஆனந்த், நகர தலைவர் வெங்கட்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×