search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
    X

    கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

    • பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்குதல், பயணப்படி 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கால தமதமின்றி பணி வரன் முறை செய்தல், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு 6 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மாதப்பன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×