search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்பாட்டம்

    • விற்பனை மையத்தில் இரண்டுமுறை பில் பதிவு செய்வதை ரத்துசெய்யவேண்டும்.
    • மாதா மாதம் ஊதியத்திற்கென நிதி ஒதுக்கவேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதல் பொதுவினியோக த்திட்டத்திற்கென தனித்து றை உருவாக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கவேண்டும். விற்பனை மையத்தில் இரண்டுமுறை பில் பதிவு செய்வதை ரத்துசெய்யவேண்டும்.

    மாதா மாதம் ஊதியத்திற்கென நிதி ஒதுக்கவேண்டும். பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக்கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்க்கு மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகிகள் முருகன் சுகதேவ், குமார் பாலகிருஷ்ணன், சண்முகம், பழனிச்சாமி, சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப் நன்றி கூறினார்.

    Next Story
    ×