search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கத்தினர்"

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் சுகாதார துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், காங்கேயம் வட்டக் கிளை செயலாளர் கதிரவன், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதாரத்துறை புள்ளியியல் அலுவலர் பெரியசாமி உட்பட அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
    • பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்

    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார். காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பணி ஓய்வு பெற்று, துறைக்கு தொடர்பில்லாதவர் பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும். புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் செயல்பாடுகள் திருப்தியி ல்லாததால் அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும்.காலியாக உள்ள கண்காணிப்புப் பொறி யாளர், செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வரைவாளர் பதவிகளை தகுதி வாய்ந்த வரைவாளர், மேற்பார்வையாளர், பணி உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்துப் பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், முதிர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ×