search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral Roll"

    • முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.
    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.

    அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

    • அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
    • 21-ந் தேதி வரை பணி நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

    வீடு,வீடாக வாக்காள ர்களை சரிபார்க்கும் பணியில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர் . வருகிற 21-ந் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.

    வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விபரங்க ளையும் சரிபார்ப்பர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள குடிமக்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் திருத்தங்கள், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைத்தல், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் செய்து கொள்ளலாம்.

    1.10.2023 அன்று 18 வயது அடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பின ர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்காளர் சேர்த்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையில் 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி வருகிற 5.1.2024 வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சரிபார்த்து இன்று முதல் (21-ந்தேதி) முதல் ஆகஸ்டு 21-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து தொடர் நடவடிக்கை யாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    முன் திருத்த நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விபரங்களை சரிபார்த்திட வருகைதர உள்ளனர்.

    எனவே மதுரை மாவட் டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மேலும் 100% தூய்மை யாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக் கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விபரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை :

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து வருகிறது.

    அந்த அடிப்படையில், ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதன்படி 1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன.

    மேலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    ஜூலை 10-ந் தேதி வரையிலான கணக்குப்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும்.
    • விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. தகுதியான வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடக்கும்.வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோவை மாற்றவும், முகாமில் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுருக்கமுறை திருத்த பணி நடக்க உள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு 1.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன.வரைவு பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும். இ

    ந்தாண்டு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, வாக்காளர்கள் தற்போதும் விண்ணப்பிக்கலாம்.தாலுகா அலுவலகங்களில் தேவையான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • திட்டக்குழு உறுப்பினர் தேர்வுக்காக 108 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கான உறுப்பினர்கள் தேர்வுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 3 உறுப்பினர்களும் என 12 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.

    மேற்கண்ட தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் 17 பேரும், நகராட்சி உறுப்பினர்கள் 11 பேரும், பேரூராட்சி உறுப்பினர்கள் 108 பேரும் கொண்ட வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இந்த பட்டியல் உள்ளாட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட, திட்டக்குழு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.

    • மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெய்பீம் பெற்றுக்கொண்டார்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் மாவட்டதிட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெய்பீம் பெற்றுக்கொண்டார்.மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம்,திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சிகள் அலுவலகம் மற்றும்அனைத்து பேரூராட்சிகள் அலுவலகம் ஆகியவற்றின் விளம்பர பலகையில்விளம்பரப்படுத்தப்படும். இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    • புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.

    டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.

    திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.
    • சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தின் மொத்த வாக்காளர் பட்டியலில் 26,35,238 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து மதுரையில் 4 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்ப ட்டன. அப்போது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அனை த்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட கலெக் டர் அனீஷ்சேகர் வெளி யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆகும். இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள், 226 பேர் 3-ம் பாலினத்தவர் ஆவர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,35,238 ஆக இருந்தது. 2023-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆக உள்ளது. இதில் 13,2,834 பேர் ஆண்கள். 13,46,733 பேர் பெண்கள். 226 பேர் 3-ம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் இன்று வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் விவரப்படி 38,509 பேர், புதிதாக சேர்க்கப்பட் டுள்ளனர். அடுத்தபடியாக 23,954 பேர் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவுகள் ஆகியவற்றின்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு சட்டசபை தொகுதியில் 3,28,270 பேர் உள்ளனர். சோழவந்தான் (தனி) தொகுதியில் குறைந்த பட்சமாக 2,18,72 வாக்கா ளர்கள் இடம்பெற்றுள்ள னர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
    • மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்மேகம் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அவர் தெரிவித்ததாவது:

    சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 14,73,024 பேரும், பெண்கள் 14,87,294 பேரும், இதரர் 275 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 60 ஆயிரத்து 593 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இதை தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 53,370 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டும், 67,027 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டும், இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 45,880 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    தொடர்ச்சியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்களில் விண்ணப்பப்படி வங்களைப் பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) எம்.ஜி.சரவணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அதன்படி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,13,085 ஆண், 1,19,375 பெண், மற்றவர்கள் - 6 என மொத்தம் 2,32,466 வாக்காளர்களும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,19,092 ஆண், 1,25,110 பெண், 30 மற்றவர்கள் என மொத்தம் 2,44,232 வாக்காளர்களும் உள்ளனர்.

    நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,22,835 ஆண், 1,31,964 பெண், 47 மற்றவர்கள் என மொத்தம் 2,54,846 வாக்காளர்களும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,778 ஆண், 1,14,976 பெண், 8 மற்றவர்கள் என மொத்தம் 2,20,762 வாக்காளர்களும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,11,712 ஆண், 1,18,421 பெண், 46 மற்றவர்கள் என மொத்தம் 2,30,179 வாக்காளர்களும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,23,193 ஆண், 1,29,465பெண், 55 மற்றவர்கள் என மொத்தம் 2,52,713 வாக்காளர்களும் உள்ளனர்.

    இதன்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,95,695, பெண் வாக்காளர்கள் 7,39,311, மற்றவர்கள் 192 வாக்காளர்கள் என நிகர வாக்காளர்கள் 14,35,198 பேர் உள்ளனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 260, சேந்தமங்கலம் -284, நாமக்கல் -289, பரமத்தி வேலூர்-254, திருச்செங்கோடு- 261 மற்றும் குமாரபாளையம்-279 என மொத்தம் 1627 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 24,090 வாக்காளர்கள் சேரக்கப்பட்டு உள்ளனர். 19,845 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்பட்டு, இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் வரை தொடர் திருத்த முறை வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது.

    31-12-2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர் 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டுகளில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை கோட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம். இணையதளம் முலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இதுவரை இணைத்துக் கொள்ளாதவர்களும் இந்த செயலியை பயன்படுத்தி இணைக்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை

    தமிழக அரசின் கூடுதல் ஆணையர் (நில சீர்திருத்த ஆணையகம்) சாந்தா வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணிகள் தொடர்பாக, மாவட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் தனித்துணை வட்டாட்சியர்கள் மற்றும் இதர வருவாய் அலுவர்கள் ஆகியோர்களுடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.

    இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்தா, வாக்காளர் சரிபார்ப்பு பட்டியலை ஏற்பளிப்பு செய்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), தனி வட்டாட்சியர் (தேர்தல்) மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×