search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்
    X

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்

    • அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
    • 21-ந் தேதி வரை பணி நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

    வீடு,வீடாக வாக்காள ர்களை சரிபார்க்கும் பணியில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் ஈடுபட்டுள்ளனர் . வருகிற 21-ந் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.

    வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விபரங்க ளையும் சரிபார்ப்பர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள குடிமக்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் திருத்தங்கள், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைத்தல், இடமாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் செய்து கொள்ளலாம்.

    1.10.2023 அன்று 18 வயது அடைய உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பின ர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்காளர் சேர்த்தல் மற்றும் சரிபார்த்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×