search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியீடு"

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

    அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

    மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    • அரியலூர் வாக்காளர் பட்டியலில் 5.07 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்
    • பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கென சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    அரியலூர்,

    அரியலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணை ந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,477 ஆண் வாக்காளர்களும், 1,27,345 பெண் வாக்காளர்களும், 04 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,54,826 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதியில் 1,26,057 ஆண் வாக்காளர்களும், 1,26,535 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,52,599 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,07,425 ஆகும்.

    மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சொர்ணா இது குறித்து கூறும்போது:-

    18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்க ப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பிக்க அனைத்து வாக்கு ச்சாவடி மையங்க ளில் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1.01.2024- ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெறவுள்ளது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியி டப்பட்டுள்ள 11 தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,41,717 பேர் , பெண்கள் 14,50,621 பேர், இதரர் 271 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 28,92,609 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி களுக்கான படிவங்கள் 27.10.2023 முதல் 9.12.2023 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    1.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 - ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7- ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.04.2024, 1.07.2024 மற்றும் 1.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 9.12.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ப ட்டு 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
    • குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரம்பலூரில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் வெளியிடப்பட்டது

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவி ல் வேந்தர் பேசியதாவது:- எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி யும் பெருமையும் அடைகி றேன். நமது கல்லூரி அதிவேகமாக மாறிவரும் நவீன உலகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. பல புதிய படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும், உயர்ந்த நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிக சிறந்த சான்றாகும்.

    இந்த புத்தகமானது அறிவியல்,பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பங்களிப்புகள் அனைத்தும் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள். நம்முடைய ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமல்லாமல், அந்தந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில், அவர்களுக்கு உள்ள அசைக்க முடியாத ஈடுபாட்டை, இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.

    இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்த தலைமை பதிப்பாசிரியர்கள் இளங்கோவன், சிவராமன், இணை பதிப்பாசிரியர்கள் அன்பு, கார்த்திகேயன், விசாலாட்சி மற்றும் தொழில்நுட்ப பதிப்பாசிரியர்கள் அருண் பிரசாத், சுரேஷ்குமார், நிரஞ்சனி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை சிறந்த முறையில் பிரசுரித்த ட்ருலைன் பப்ளிஷர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
    • தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    மத்திய ஆயுதப்படை சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.எப். மற்றும் ரைபிள்மேன் ஆகியவற்றில் தேர்வு-2022 அறிவிப்பு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் விண்ணப்பித்தனர். தகுதி யான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வெளியிடப் பட்டுள்ளது. மின்னணு ஹால்டிக்கெட் எனப்படும் இ-அட்மிட் கார்டை விண்ணப்பதாரர்கள்https://www.crpfonline.com என்ற சி.ஆர்.பி.எப் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த இ-அட்மிட்டின் அச் சிடப்பட்ட நகலை கொண்டு தேர்வு மையத்து கொண்டு மாறு வர வேண்டும். ஹால்டிக்கெட் கொண்டு வராத விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார் கள் என மத்திய அரசு பணி யாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.

    • 5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • விழுப்புரத்தை சேர்ந்த திவ்யா என்பவர் முதலிடம் பிடித்தார்

    வடவள்ளி,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ–கத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும், ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளம் அறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதில் 36612 பேர் தர வரிசைக்கு தகுதி பெற்றனர். அதில் பெண்கள் 21, 384, ஆண் 12,333 பேர் விண்ணப்பித்தனர்.

    அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7½ சதவீத இட ஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் இ.எம்.ஐ எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்கக்ப்ப்டு உள்ளது.

    தமிழ் வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் இட ஒதுக்கீட்டில் 309 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு மொத்தம் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 790 விண்ண ப்பங்கள் பெறப்பட்டு அவர்கள் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தொழில்முறை கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இந்த நிலையில் இன்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கீதாலட்சுமி இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

    இதில், முதல் இடத்தை விழுப்புரத்தை சேர்ந்த திவ்யாவும், 2-ம் இடத்தை மதுரையை சேர்ந்த ஸ்ரீராம், 3-ம் இடத்தை தென்காசியை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் பிடித்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.

    தகுதியானவர்கள் இந்த மாத கடைசி வாரத்தில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். இணைய வழி கலந்தாய்வு மற்றும் பொது இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளது.

    • 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
    • மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.

    விருதுநகர்

    தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.

    • மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

    கோவை,

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா கூறியதாவது:-

    கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 7604010581 என்ற செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இந்த எண் மூலம் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும் சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர், துடியலூர், தடகாம், காரமடை, மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

    அதில் உள்ள செல்போன் எண் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெய்பீம் பெற்றுக்கொண்டார்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் மாவட்டதிட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெய்பீம் பெற்றுக்கொண்டார்.மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம்,திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சிகள் அலுவலகம் மற்றும்அனைத்து பேரூராட்சிகள் அலுவலகம் ஆகியவற்றின் விளம்பர பலகையில்விளம்பரப்படுத்தப்படும். இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 4-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    ×