search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தக்காளி, கத்தரி, வெண்டைகளுக்கான விலை முன்னறிவிப்பு வெளியீடு
    X

    கோவையில் தக்காளி, கத்தரி, வெண்டைகளுக்கான விலை முன்னறிவிப்பு வெளியீடு

    • தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரை இருக்கும் என ஆய்வு முடிவின்படி அறியப்பட்டு உள்ளது.
    • கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை,

    கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22ல் தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது.

    தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி ராயகோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம், சாவடி, உடுமலை, தாராபுரம் மற்றும் கர்நாட மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து வருகிறது.

    மேலும் வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்ததி செய்யப்பட்டுகிறது. வர்த்தக மூலங்களின்படி கோவை சந்தைக்கு தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இதேபோல வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) வெண்டைக்காய் 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்ப்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வர்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு வெண்டைக்காய மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    பொருளாதார ஆய்வு முடிவின்படி அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையும், நல்ல தரமான கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.27 ஆகவும், வெண்டைக்காயின் விலை ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் என அறியப்பட்டு உள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவுகளை எடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×