search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "time table"

    • ரெயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்
    • தண்டவாள பணிகள் முடிக்க பட்டதால் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    திருப்பூர்:

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ெரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என,ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ெரயில் நிலையம் இடையே, தண்டவாள பணிகள் நடப்பதால், பாலக்காடு - திருச்சி (16844), திருச்சி - பாலக்காடு (16843) உள்ளிட்ட 2 ெரயில்களின் சேவை, ஜூலை 20-ந் தேதி முதல் 25ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.
    • திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலை:

    பழனி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    கோவை - திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06077) வருகிற 4, 5, 6 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வரை இயக்கப்படுகிறது.

    இந்த ெரயில் கோவையில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படுகிறது. போத்தனூருக்கு 9:31க்கு வந்து 9:32 மணிக்கு புறப்படுகிறது. கிணத்துக்கடவுக்கு 9:52க்கு வந்து, 9:53 மணிக்கு புறப்படுகிறது.பொள்ளாச்சிக்கு 10:13 மணிக்கு வந்து 10:15 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10:46க்கு வந்து 10:47 மணிக்கு புறப்படுகிறது.

    உடுமலைக்கு 11 மணிக்கு வந்து 11:01 மணிக்கும்,மைவாடி ரோடுக்கு 11:09 மணிக்கு வந்து 11:10 மணிக்கும் புறப்படுகிறது. மடத்துக்குளத்துக்கு 11:14 மணிக்கு வந்து, 11:15 மணிக்கு புறப்படுகிறது. அதன்பின் திண்டுக்கல்லுக்கு, 1 மணிக்கு சென்றடைகிறது.திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ெரயில் (எண்: 06078) மதியம் 2 மணிக்கு புறப்படுகிறது. அங்கு இருந்து மடத்துக்குளத்துக்கு 3:18 மணிக்கு வந்து 3:19க்கும், மைவாடி ரோடு சந்திப்புக்கு 3:24 மணிக்கு வந்து 3:25 மணிக்கும்,உடுமலைக்கு 3:33 மணிக்கு வந்து 3:34 மணிக்கும் புறப்படுகிறது.

    கோமங்கலத்துக்கு 3:47 மணிக்கு வந்து 3:48 மணிக்கும்,பொள்ளாச்சி ஜங்ஷனுக்கு 4:18க்கு வந்து 4:20 மணிக்கு புறப்படுகிறது.கிணத்துக்கடவுக்கு 4:43க்கு வந்து 4:44 மணிக்கும், போத்தனூர் ஜங்ஷனுக்கு 5:08 மணிக்கு வரும் ரெயில் 5:10 மணிக்கும், கோவை ஜங்ஷனுக்கு 5:30 மணிக்கு சென்றடைகிறது.இதற்கான நேர அட்டவணையை தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ளது.

    • செங்கோட்டையில் இருந்து தினந்தோறும் ரெயில் புறப்படும், வந்தடையும் நேரம் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டது.
    • ரெயில்வே அட்டவணை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் புறப்படும் ரெயில்களின் நேரம், திரும்பி செங்கோட்டைக்கு வந்தடையும் நேரம் ஆகியவை குறித்து அட்டவணை தயாரிக்கப்பட்டு அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. 5000 நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வணிகப் பெருமக்கள், வாசகர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டது.


    2018-19ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். #publicexam #timetablereleased
    சென்னை:

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29 வரையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், 11-ம் வகுப்புகளுக்கு மார்ச் 6 முதல் 22 வரையிலும், 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.



    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பதிவு செய்யும் முறையை ஆன்லைனில் கொண்டு வருவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதை தவிர்க்க, தமிழகத்திலேயே அதிகப்படியான மையங்களை அமைக்க தயார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் 500 மையங்கள் கேட்டாலும் கொடுக்க தயார் எனவும், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பாக கற்க ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றும், அதற்கு பெரிதும் உதவியாக ஸ்மார்ட் வகுப்பு திட்டம் இருக்கும் எனவும் கூறினார். 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் பாடங்கள் நீட் குறித்ததாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

    மேலும், நீட் தேர்வில் குறைந்தது 250 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெகு சில ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், பல ஆசிரியர்கள் பணியில் இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். #publicexam #timetablereleased
    ×