என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "diwali bonus"
- அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் சிஐடியூ. மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருப்பூர்:
திருப்பூா் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் பனியன் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-
திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளா்களுக்கு விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இந்தத் தொகையை பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அவா்களது வேலைக்கு ஏற்ப போனஸ் வழங்குவதை பனியன் நிறுவனங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் வரும் அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிஐடியூ. மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
- தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2011 - 2020 வரையிலான 10 ஆண்டுகளாக வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்களே இருப்பதாக கூறி அவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டு வரும் அக்டோபர்24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். மாவட்டத்திலிருந்து இன்றளவும் ஒப்பந்த தொழிலாளர் விவர பட்டியல் மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்துக்கு அனுப்பவில்லை.
எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் போனஸ் தொகை கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரித்து, ஐகோர்ட்டும் ஒவ்வொரு ஆண்டும் போராட்டத்துக்கு தடை விதித்து வருகிறது.
அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஐகோர்ட்டு இந்த ஆண்டும் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 950 உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை, 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றன.
இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு 30 சதவீத போனஸ் வேண்டும் என்றும் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHC #108Ambulance
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றார். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நில பத்திரங்களை எடுத்து கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அதில், கடவூர் ஜமீனிடமிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அதனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது கிராம கணக்கில் நிலஉச்சவரம்பு புஞ்சை நிலமாக தவறுதலாக உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு எங்களது கிரயபத்திரத்தின் அடிப்படையில் கணினியில் ஏற்றிவிட்டு மனைபட்டா மாற்றம் செய்து தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குளித்தலையை சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், குளித்தலை காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால் கடந்த 40 ஆண்டுகளாக எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் அள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே இங்கு போதிய படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சிலர் தங்களுக்கு பணிக்கொடை நீண்ட நாட்களாக வழங்கப்படாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி 6-ந் தேதி இரவு 8 மணி வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம். அதன்பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். #Diwali
108 இலவச ஆம்புலன்சுகள் மூலம் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள்.
பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த இலவச ஆம்புலன்சு சேவை மிக உபயோகமாக உள்ளது.
இந்த நிலையில் 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் அவர்கள் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
வரும் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி இரவு 8 மணி வரை மொத்தம் 24 மணி நேரம் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும் போது, ‘‘எங்கள் சங்கத்தை பொறுத்த வரையில் சேவையை நிறுத்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்க ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் எங்களை நிர்வாகம் போராட்டத்தில் தள்ளுகிறது என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்’’ என்று கூறினர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 108 ஆம்புலன்சுகள் 35 உள்ளன. இதில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். 70 டிரைவர்கள், 80 மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர்.
தீபாவளி அன்று இவர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். #diwali
தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.
ரெயில்வே துறையில் பணியாற்றும் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.2000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.
ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. #Diwalibonus #RailwayEmployees
புதுவை பாண்லே பால் விற்பனை முகவர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் அபிஷேகம், பஞ்சாலை சங்க நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ரவி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை பற்றி செயலாளர் முருகன் விளக்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* பாண்லே நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கும், பாலை பதனிடும் தொழிலாளர்களுக்கும் பாண்லே அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் போனஸ் வழங்கி வருகிறது.
ஆனால், பாலை மக்களிடம் கொண்டு சென்று விற்று பணமாக்கி கொடுக்கும் விற்பனை ஏஜெண்டுகளுக்கு (முகவர்) மட்டும் போனஸ் வழங்க மறுத்து வருகிறது.
இந்த பாரபட்ச நிலையை பாண்லே நிர்வாகம் கைவிட்டு விற்பனை ஏஜெண்டுகளுக்கும் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும்.
* முகவர்கள் அலுவலக நேரத்துக்குள் பணம் கட்டத்தவறினால் அதற்காக அபராதமாக அன்றைய ஏஜெண்டின் கமிஷனில் 10 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து வந்த வகையில் ஒவ்வொரு ஏஜெண்டுக்கும் தலா சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை நிர்வாகம் பிடித்தம் செய்து வைத்துள்ளது. அபராதம் என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வாகத்திடம் உள்ள ஏஜெண்டுகளுக்கு சேர வேண்டிய அந்த தொகையை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும்.
* முன்பணம் செலுத்தி பாண்லேவில் இருந்து பாலை பெற்று விற்பனை செய்யும் ஏஜெண்டுகளை நிரந்தர முகவர்களாக மாற்றம் செய்ய வேண்டும். வைப்பு தொகை செலுத்தி பாண்லேவில் பாலை பெற்று பல ஆண்டுகளாக வியாபாரம் செய்த சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு உதவியாக இருந்த வர்களிடம் பூத்தை மாற்றி கொடுத்துள்ளனர்.
அதுபோல் பூத்தை மாற்றி வாங்கியவர்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடத்தி வரும் நபர்களுக்கே விற்பனை உரிமத்தை மாற்றி வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி காலை 8 மணி முதல் அலுவலக நேரம் முடிய குருமாம்பேட் பாண்லே தலைமை அலுவலகம் முன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வது என கூட்டம் முடிவு செய்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்