search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த தொழிலாளர்"

    • பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து போலீசார் விசாரணை.
    • பாதுகாப்பை உறுதி செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு.

    சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் பெருமாள் வயது (52) கரிமேடு பகுதியை சேர்ந்தவர்.

    இச்சம்பவம் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர் :

    மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக நடப்பு சட்டப் பேரவை கூட்டத்தில் தீர்வு காண வேண்டும் எனக்கோரி தொ.மு.ச. சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    மின்வாரிய பொது ஒப்ப ந்த தொமுச. மாநிலஇணைப் பொதுச்செ யலாளர் ஈ.பி. அ.சரவணன், துணைத் தலைவர் ஈ.பி. செந்தில் என்ற பழனிசாமி ஆகியோர் சென்னையில் மின்சா ரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிடம் அளித்த மனுவில் கூறியிரு ப்பதாவது :- மின்சார வாரியத்தில் வயர்மேன், போர்மேன், பொறியாளர், களஉதவியாளர்கள், கணக்கீட்டாளர்கள் என 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.மின்சார வாரியத்தில் மற்ற பிரிவு பணியாளர்களை விட வயர் மேன், உதவியாளர்கள் பணியிடங்கள்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்துபணியாற்றி வருகின்றனர்.

    ஆகவே நாளை 12-ந் தேதி நடைபெ றவுள்ள மின்வாரிய மானியக்கோரிக்கை யின்போது சிறப்பு கவனம் செலுத்திஅனைத்து ஒப்பந்ததொழிலா ளர்களையும் பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
    • தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் அனைவருக்கும் நடப்பு ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 2011 - 2020 வரையிலான 10 ஆண்டுகளாக வெறும் 18 ஒப்பந்த தொழிலாளர்களே இருப்பதாக கூறி அவர்களுக்கு மட்டுமே தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டு வரும் அக்டோபர்24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கவேண்டும். மாவட்டத்திலிருந்து இன்றளவும் ஒப்பந்த தொழிலாளர் விவர பட்டியல் மின்வாரிய தலைமை பொறியாளர் பணியமைப்பு அலுவலகத்துக்கு அனுப்பவில்லை.

    எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளரை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×