மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - அமைச்சரிடம் கோரிக்கை

58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜிடம் அளித்த மனு காட்சி.
அமைச்சர் செந்தில்பாலாஜிடம் அளித்த மனு காட்சி.
Published on

திருப்பூர் :

மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக நடப்பு சட்டப் பேரவை கூட்டத்தில் தீர்வு காண வேண்டும் எனக்கோரி தொ.மு.ச. சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மின்வாரிய பொது ஒப்ப ந்த தொமுச. மாநிலஇணைப் பொதுச்செ யலாளர் ஈ.பி. அ.சரவணன், துணைத் தலைவர் ஈ.பி. செந்தில் என்ற பழனிசாமி ஆகியோர் சென்னையில் மின்சா ரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிடம் அளித்த மனுவில் கூறியிரு ப்பதாவது :- மின்சார வாரியத்தில் வயர்மேன், போர்மேன், பொறியாளர், களஉதவியாளர்கள், கணக்கீட்டாளர்கள் என 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.மின்சார வாரியத்தில் மற்ற பிரிவு பணியாளர்களை விட வயர் மேன், உதவியாளர்கள் பணியிடங்கள்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளை ஒப்பந்த தொழிலாளர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்துபணியாற்றி வருகின்றனர்.

ஆகவே நாளை 12-ந் தேதி நடைபெ றவுள்ள மின்வாரிய மானியக்கோரிக்கை யின்போது சிறப்பு கவனம் செலுத்திஅனைத்து ஒப்பந்ததொழிலா ளர்களையும் பணிநிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com