search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambulance employees"

    போனஸை வலியுறுத்தி தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #MadrasHC #108Ambulance
    சென்னை:

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் போனஸ் தொகை கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

    இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரித்து, ஐகோர்ட்டும் ஒவ்வொரு ஆண்டும் போராட்டத்துக்கு தடை விதித்து வருகிறது.

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஐகோர்ட்டு இந்த ஆண்டும் தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 950 உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை, 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றன.

    இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு 30 சதவீத போனஸ் வேண்டும் என்றும் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 30 சதவீத போனஸ் தொகை கேட்டு வருகிற 5-ந்தேதியும் அதற்கு மறுநாளான தீபாவளி நாளிலும் (6-ந்தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.


    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு அத்தியாவசியமானது. தீபாவளி அன்று வெடிவிபத்து ஏற்படும்போது, பாதிக்கப்படுபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை அத்தியாவசியமானது. எனவே, இவர்களது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHC #108Ambulance
    திருச்சியில் இதய நோயுடன் பிறந்த குழந்தைக்கு ஆபரேசன் செய்வதற்காக 4 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. #AmbulanceStaff #TrichyBaby
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகரை சேர்ந்த குணசீலன் மனைவி கிருஷ்ணவேணி, பிரசவத்திற்காக திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சிசுவுக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததை டாக்டர்கள் குழுவினர் கண்டுபிடித்தனர்.

    உடனடியாக ஆபரே‌ஷன் செய்யாவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் ஆபரே‌ஷன் செய்ய டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்கான வசதி திருச்சியில் இல்லை. எனவே சென்னை அப்பல்லோவில் ஆபரே‌ஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்க்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த குழந்தையை சென்னை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்க்குபேட்டர் வசதியுடன் விமானத்தில் செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதால், ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடிவானது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் அவசரமாக ஆபரே‌ஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்காக நேற்று மாலை 4 மணியளவில் அமெரிக்கன் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஆம்புலன்சுகள் புறப்பட, அதற்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக 2 ஆம்புலன்சுகள் சென்றன. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விழுப்புரம் வரை ஆம்புலன்சு செல்வதில் சிக்கல் இல்லை.

    ஆனால் அதற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிவிடும் என்பதால் ஒரே நேரத்தில் சைரன் ஒலியுடன் ஏராளமான ஆம்புலன்சு சென்றால் வாகன ஓட்டிகள் விலகி விடுவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.


    இதற்காக விழுப்புரம், செங்கல்பட்டு போலீசாரின் உதவி கேட்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஆம்புலன்ஸ்கள் விழுப்புரம் சென்றதும் அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மேலும் 8 ஆம்புலன்ஸ்களுடன் இணைந்து சென்னைக்கு புறப்பட்டனர். இரவு 7.30 மணிக்கு அனைத்து ஆம்புலன்சுகளும் செங்கல்பட்டை அடைந்ததும், அங்கு தயார் நிலையில் இருந்த செங்கல்பட்டு போலீசார் மற்றும் மேலும் 15 ஆம்புலன்சுகள் கான்வாயில் இணைந்து சென்றன.

    அதன்படி குழந்தையின் ஆம்புலன்சுக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னுமாக 25 ஆம்புலன்ஸ்கள் உடன் சென்றன. இரவு 8 மணிக்கு சென்னை அப்பல்லோவை ஆம்புலன்ஸ்கள் அடைந்தன.

    அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் இருந்து குழந்தையை இறக்கி ஆபரே‌ஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று உடனடியாக ஆபரே‌ஷன் செய்தனர். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குழந்தையை பத்திரமாக சென்னைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், போலீசாரை, குழந்தையின் உறவினர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் பாராட்டினர். #AmbulanceStaff #TrichyBaby
    சம்பள உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை நடந்து வருகிறது. 108-க்கு போன் செய்ததும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.

    ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் உள்ளனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் அவர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    108 ஆம்புலன்சில் டிரைவர்கள், டெக்னீசியன்கள், மருத்துவ உதவியாளர்கள், கால்சென்டர் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 17 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 22 ஆயிரமும் வழங்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாகவே ரூ. 17 ஆயிரம்தான் வழங்குகிறார்கள்.

    வேலை நேரம் 8 மணி நேரம் மட்டுமே. ஆனால் 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். 108 ஆம்புலன்சுகளை நிறுத்த சில ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கவும் இடம் இல்லை.

    108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சரியான பராமரிப்பில் இல்லை. அவற்றை பராமரிப்பு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×