search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்
    X

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்

    சம்பள உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை நடந்து வருகிறது. 108-க்கு போன் செய்ததும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.

    ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் உள்ளனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் அவர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    108 ஆம்புலன்சில் டிரைவர்கள், டெக்னீசியன்கள், மருத்துவ உதவியாளர்கள், கால்சென்டர் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 17 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 22 ஆயிரமும் வழங்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாகவே ரூ. 17 ஆயிரம்தான் வழங்குகிறார்கள்.

    வேலை நேரம் 8 மணி நேரம் மட்டுமே. ஆனால் 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். 108 ஆம்புலன்சுகளை நிறுத்த சில ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கவும் இடம் இல்லை.

    108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சரியான பராமரிப்பில் இல்லை. அவற்றை பராமரிப்பு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×