search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் தொழிலாளர் சங்கம்"

    • அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் சிஐடியூ. மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் பனியன் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளா்களுக்கு விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூடுதலாக தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இந்தத் தொகையை பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு அவா்களது வேலைக்கு ஏற்ப போனஸ் வழங்குவதை பனியன் நிறுவனங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் வரும் அக்டோபா் முதல் வாரத்தில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் போனஸ் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சிஐடியூ. மாவட்டச் செயலாளா் கே. ரங்கராஜ், பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    ×