search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled person"

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    புதுடெல்லி :

    எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிறபோது அவர்கள் அவற்றைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.

    இனி அந்த பிரச்சினை இல்லை. இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கைகளை (லோயர் பெர்த்) ஒதுக்க முன்னுரிமை வழங்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடு படுக்கைகள் (மிடில் பெர்த்) ஒதுக்கப்படும்.

    இதுதொடர்பாக ரெயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது.

    அந்த உத்தரவில், "மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாஸ்சில் (எஸ்-பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும். மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கை, ஒரு நடுபடுக்கையும், மூன்றடுக்கு எகனாமி ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும், ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் பயணங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள அமராவதிபாளையம், நத்தகாட்டுதோட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 46).மாற்றுதிறனாளி யான இவர் கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கோவிந்தராஜ் கலைக்கொல்லி பூச்சி மருந்து குடித்து விட்டார். இதுகுறித்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். உடனே குடும்பத்தினர் கோவிந்தரா ஜை முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்து விட்டார்.இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பால சுப்பிரமணியன் என்பவர் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்
    • ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் அவருக்கு வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும், அமைச்சருமான கீதாஜீவனிடம் கேட்டு வருகிறார்.

    அந்த வகையில் தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பால சுப்பிரமணியன் என்பவர் தனக்கு 3 சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனு வழங்கிய அவரை, அங்கேயே அமர வைத்து ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர சைக்கிள் வழங்கப் பட்டது.

    நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளரும் கவுன்சிலரு மான கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயசீலி, வட்டச் செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், செந்தில்குமார், முன்னாள் வட்டச் செயலாளர் மாரியப்பன் மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இது குறித்து பாலசுப்பிரமணியன் கூறுகையில், கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அயராது பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவர் தான் என்பதை இந்தியா முழுவதும் நிரூபித்து வருகிறார். அதே வழியில் அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குறைகேட்பு மனு பெற்றுக்கொள்வதாக தகவல் கிடைத்தது.

    அவரிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேற்றி தருவார்கள் என்று பலரும் கூறியதன்பேரில் மனு அளித்தேன். என்னை இங்கே அமரவைத்து 1 மணிநேரத்தில் சைக்கிள் வழங்கியதை என் வாழ் நாளில் மறக்க மாட்டேன். முதல்-அமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவ ரங்களையும் கண்டறிந்து பேசியபோது பெண்சிங்கம் என்று கீதாஜீவனுக்கு பட்டம் சூட்டினார். அதன்பின்னர் தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை திறப்பின் போது அதே வார்த்தையை 2-வது முறையாக கூறினார்.

    சென்னையில் சமூக நலத்துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் 3-வது முறையாக பெண்சிங்கம் என்ற வார்த்தையை முதல்-அமைச்சர் கூறினார். அதற்கேற்றாற் போல் இந்த வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பணிகள் இது போல் பல நடைபெற்றுள்ளன. என்னை போன்ற ஏழை- எளியவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 பெறும் பயனாளி நெகிழ்ச்சியடைந்தார்.



    மாற்றுத் திறனாளி கருப்பையா

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திற னாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் மாற்றத்தை கொண்டு வரும் திறனாளிகள் என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு அவர்களுக்கான திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கைபேசி, கணினி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது.

    காது கேளாத மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கு அடிப்படை பயிற்சி, கட்டண மில்லா பஸ் பயண அட்டை, மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கால் மற்றும் நவீன ஒப்பு காதொலி கருவி, முடம் நிக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் வட்டத்தில் 1583 மாற்றுத்திறனாளி களுக்கும்,ராமேசுவரம் வட்டத்தில் 429 மாற்றுத்திற னாளிகளுக்கும், திருவாடானை வட்டத்தில் 1033 மாற்றுத்திறனாளிக ளுக்கும், கீழக்கரை வட்டத்தில் 803 மாற்றுத்திற னாளிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 725 மாற்றுத்திறனாளிகளுக்கும், கடலாடி வட்டத்தில் 1138 மாற்றுத்திறனாளிகளுக்கும், கமுதி வட்டத்தில் 838 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகுளத்தூர் வட்டத்தில் 1001 மாற்றுத்திறனாளி களுக்கும், பரமக்குடி வட்டத்தில் 1336 மாற்றுத்திற னாளிகளுக்கும் என மொத்தம் 8886 மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 32 ஆயிரத்து 378 நபர்கள் மாற்றுத்திறன் கொண்ட வர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள வழங்கப்பட்டுள்ளது.

    14 ஆயிரத்து 905 நபர் களுக்கு மத்திய அரசின் UDID திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளது. கடந்த மே 2021 முதல் பிப்ரவரி 2023 வரை மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட வங்கிக்கடன் மானியமாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 528 மதிப்பிலான மானியத் தொகையும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.63 லட்சம் மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பிலும், நவீன செயலிகளுடன் கூடிய கைபேசி 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலும், முடநீக்கியல் கருவி 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 120 மதிப்பிலும், 3 சக்கர சைக்கிள் மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பி லும், சக்கர நாற்காலி 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து10 ஆயிரத்து 600 மதிப்பிலும் என 467 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 90 ஆயிரத்து 748 மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளி கருப்பையா கூறும்போது, மூளை வாத முடக்கு நோயால் பாதிக்கப் பட்டேன். மாற்றுதிறனாளி களுக்கான அடையாள அட்டை பெற்று மாதம் ரூ.1,000 பெற்று வந்தேன். தற்போது முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் முதல் 1,500 வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருவதன் மூலம் எனக்கு ரூ.1,500 கிடைக்கிறது.

    மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாற்றுத்திற னாளிகளின் பாதுகாவ லனாக திகழ்ந்து வருகின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன் றியை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

    இந்த தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி தொடர்பு அலுவலர் விஜய குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
    • தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.

    தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • சொத்து தகராறில் அண்ணனையே மாற்று த்திறனாளி வெட்டி கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே எரசக்க நாயக்கனூரை சேர்ந்தவர் முருகன் (வயது49). இவரது சகோதரர் பால்பாண்டி (38). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.

    முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பூர்வீக 2 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தனர். ஆனால் பால்பாண்டிக்கு குறைந்த அளவே பணம் கொடுத்துள்ளனர். இதனால் பால்பாண்டிக்கு முருகன் மீது ஆத்திரம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று குடி போதையில் இருந்த பால்பாண்டி முருகனிடம் சைகையால் பிரச்சினை செய்தார். அப்போது முருகனுக்கு சொத்து கொடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

    சொத்து தகராறில் அண்ணனையே மாற்று த்திறனாளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் நீலநிற அட்டை வழங்கப்படுகிறது. அதுவும் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2-வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய் கிழமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் முன்னிலையிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 10-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி, நீல நிற வேலை அட்டை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
    • புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள லாட்ஜூகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

    இந்நிலையில் சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் சன்னதி தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தனர். இன்று காலை திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் அறைகளுக்குள் புகை மூட்டம் பரவியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அறைகளில் தங்கி இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர்.

    அப்போது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரைராஜ் என்பவர் வெளியே வர முடியாமல் அறையில் சிக்கிக் கொண்டார். புகை மூட்டம் அதிகம் ஏற்பட்டு தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

    மருத்துவ சேவை, சமூக மற்றும் தொழில் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த அனைத்து சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    இம்மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் ஒரு அங்கம் ஆகும். 1960-ம் ஆண்டு முதன் முதலில் எலும்பு முறிவு சிகிச்சையின் கீழ் உட்பிரிவாக அரசு பொது மருத்துவமனையில் உடல் இயக்கவியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறை (பி.எம்.ஆர்.) தோற்றுவிக்கப்பட்டது. விரிவான இடவசதி கருதியும், மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு தொடர்பான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் பொருட்டும் சென்னை, கே.கே. நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மாற்றப்பட்டது.

    இம்மருத்துவமனை மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் தொழில்முறை சிகிச்சை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புனர்வாழ்வு மையம் ஆகும்.

    இம்மருத்துவமனையில், 60 படுக்கைகள் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் உறுப்பு துண்டித்தல் ஆகிய மூன்று உள்நோயாளிகள் பிரிவுகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. இம்மருத்துவமனையில் நாள்தோறும் 250 புறநோயாளிகளும், 30 உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    ஒப்புயர்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பயிற்சி வசதிகள், இயன்முறை பயிற்சி, மின்முறை சிகிச்சை ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    மேலும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருவிகளையும் பார்வையிட்டார்.

    இப்புதிய ஒப்புயர்வு மையத்தின் மூலம் 60 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், மூளைக் காயம், பெருமூளை வாதம், தசைக்கூட்டு கோளாறு நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை அருகே விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.40 லட்சம் செலவில் வீடு வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அவர்களை பயன்பெறச் செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி திருமன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமணன் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக முதுகு தண்டு பாதித்து, கால்கள் செயலிழந்த நிலையில் உள்ளார்.

    அவர் தற்போது தனது குடும்பத்தினரின் அரவணைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறார். அவருக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரது இல்லத்திற்கு சென்று மருத்துவப் பராமரிப்பு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் லட்சுமணனுக்கு பெரு நிறுவன சமூக பொறுப்புகள் திட்டநிதி 2021-22ன் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெகநாதசுந்தரம், உதவி பொறியாளர் கிருஷ்ண குமாரி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் சேவையாற்றி மாற்றுத்திறனாளி ஒருவர் முத்திரை பதித்து வருகிறார்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு ‘சல்யூட்’ செய்வோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாகராஜன் - அழகம்மாள் மூத்த மகன் ஹரிகரசுதன். இவர் பிறந்து 18 மாதங்களில் இளம் பிள்ளைவாதம் பாதிப்பு ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ்ப் பகுதி முழுமையாக செயலிழந்து விட்டது. இதன் பின் அவரது தாய், ஹரிகரசுதனை மருத்துவமனைக்கு நடையாய் நடந்து அழைத்து சென்றும் குணப்படுத்த முடியவில்லை. 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டது. மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வேதனையுற்றனர். ஆனால் மனம் தளரவில்லை. மகன் மீண்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

    இது குறித்து ஹரிகரசுதன் கூறியதாவது:-

    உன்னால் எல்லோரையும் போல வாழ முடியும் என்ற நம்பிக்கையை எனது தாய் ஏற்படுத்தி வளர்த்தார். கிராம மக்களின் ஆதரவினால் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 8- வது வார்டில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன்.

    மற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத நான் உள்ளாட்சி பிரதிநிதியாக வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்று கொடுத்துள்ளேன். என்னால் எங்கும் செல்ல முடியாத நிலையில் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து, என்னாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி சிறு தொழில் தொடங்க ஊக்கமளித்தார். குறைந்தபட்சமாக 5 ஆயிரம் முதலீட்டில் காரசேவு, மிக்சர் பாக்கெட் போன்ற நொறுக்கு தீனிகளை எடுத்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் நீண்ட தூரம் வரை சென்று விற்பனை செய்து வருகிறேன். உழைப்பே நம்பிக்கை என்று தாரக மந்திரத்தில் வாழ்ந்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கத்தில் மாவட்ட பொரு ளாளராக இருந்து வருவதுடன் மாற்றுத் திறனாளிகள் அடிப்படை உரிமைகளுக்காக டெல்லி, சென்னை என 70க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன். பாடல் பாட தெரியும் என்பதால் தனியார் தொலைக் காட்சியில் நடைபெற்ற போட்டி யிலும் பங்கேற்றுள்ளேன்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊனம் என்று நினைத்து ஒதுங்கி முடங்கி விடாமல், தன்னம்பிக்கையை தளர விடாமல் மக்கள் சேவையாற்றி பல்வேறு முத்திரைகளை பதித்து வரும் இவரை போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு 'சல்யூட்' செய்வோம்.

    • விருது பெறுவோரை தேர்வு செய்ய மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
    • சிறப்பாக செயலாற்றிய மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.

    2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் நாளை வழங்கப்படவுள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, ஏ. நாராயணசாமி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விருதுகளுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தம் 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு என மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×