search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்று திறனாளி"

    • தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
    • நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோட்டுக்கு வருகை தருகிறார்.

    இன்று மாலை 4 மணி அளவில் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்.

    தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மீண்டும் ஈரோட்டுக்கு வருவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியிலும், 5.30 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியிலும், 6 மணிக்கு மரப்பாலம், அண்ணா டெக்ஸ் மேடு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்கிறார்.

    முன்னதாக ஈரோடு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    • விருது பெறுவோரை தேர்வு செய்ய மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
    • சிறப்பாக செயலாற்றிய மாநிலங்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.

    2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் நாளை வழங்கப்படவுள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, ஏ. நாராயணசாமி மற்றும் பிரதிமா பௌமிக் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விருதுகளுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தம் 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு என மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிப்பு
    • மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு எந்த சலுகைகளும் செய்யவில்லை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தாழக்குடி வீரநாராயண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 39 )ஆட்டோ டிரைவர்.இவர் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.

    இவர் தனது சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களுக்கும் செல்ல சாய்வு தளம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புக்கொடியுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல் வெளியானது.

    இதையடுத்து வள்ளிநா யகம் வீட்டிற்கு சென்ற ஆரல்வாய்மொழி போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வள்ளி நாயகத்தை ஆரல்வா ய்மொழி போலீஸ் நிலைய த்திற்கு அழைத்து சென்றனர்.பின்னர் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

    போலீசாரால் விடுவி க்கப்பட்ட பிறகு அவர் அங்கிருந்து நேராக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    கலெக்டர் அலுவலக த்திற்கு வந்த வள்ளிநாயகம் கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து நேசமணி நகர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர் கருப்பு கொடியுடன் ஆட்டோவில் புறப்பட தயாரானார்.

    அப்போது திடீரென போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து வள்ளி நாயகம் கலெக்டர் அலுவலகத்தின் எதிர்புறம் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.விடிய விடிய அவர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று காலையிலும் தொடர்ந்து வள்ளிநாயகம் போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளார். இதுகுறித்து வள்ளிநாயகம் கூறுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு எந்த சலுகை களும் செய்யவில்லை இது தொடர்பாக நான் போராடி வருகிறேன் என்றார்.

    ×