search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை அட்டை"

    • 4,348 மாற்றுத்திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டையை கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வரும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக் டர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ள நிலையில் இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4.348 மாற்றுத் திறனாளிகளுக்கு நீலநிற வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளது குறைகள் தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்சி முகமை முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 10 வரை ராமநா தபுரம் மாவட்டத்தி லுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவல கத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் நீல நிற அட்டையினை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் நீலநிற அட்டை வழங்கப்படுகிறது. அதுவும் தவிர மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் 2-வது செவ்வாய் கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய் கிழமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் முன்னிலையிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 10-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பயனாளிகள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி, நீல நிற வேலை அட்டை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×