மக்கள் சேவையாற்றி முத்திரை பதிக்கும் மாற்றுத்திறனாளி

மக்கள் சேவையாற்றி மாற்றுத்திறனாளி ஒருவர் முத்திரை பதித்து வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு ‘சல்யூட்’ செய்வோம்.
தாய் அழகம்மாளுடன் ஹரிகரசுதன்.
தாய் அழகம்மாளுடன் ஹரிகரசுதன்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சி சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் நாகராஜன் - அழகம்மாள் மூத்த மகன் ஹரிகரசுதன். இவர் பிறந்து 18 மாதங்களில் இளம் பிள்ளைவாதம் பாதிப்பு ஏற்பட்டு இடுப்புக்குக் கீழ்ப் பகுதி முழுமையாக செயலிழந்து விட்டது. இதன் பின் அவரது தாய், ஹரிகரசுதனை மருத்துவமனைக்கு நடையாய் நடந்து அழைத்து சென்றும் குணப்படுத்த முடியவில்லை. 90 சதவீதம் ஊனம் ஏற்பட்டது. மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வேதனையுற்றனர். ஆனால் மனம் தளரவில்லை. மகன் மீண்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

இது குறித்து ஹரிகரசுதன் கூறியதாவது:-

உன்னால் எல்லோரையும் போல வாழ முடியும் என்ற நம்பிக்கையை எனது தாய் ஏற்படுத்தி வளர்த்தார். கிராம மக்களின் ஆதரவினால் கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் 8- வது வார்டில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றேன்.

மற்றவர்கள் உதவி இன்றி வாழ முடியாத நான் உள்ளாட்சி பிரதிநிதியாக வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்று கொடுத்துள்ளேன். என்னால் எங்கும் செல்ல முடியாத நிலையில் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்து, என்னாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி சிறு தொழில் தொடங்க ஊக்கமளித்தார். குறைந்தபட்சமாக 5 ஆயிரம் முதலீட்டில் காரசேவு, மிக்சர் பாக்கெட் போன்ற நொறுக்கு தீனிகளை எடுத்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் நீண்ட தூரம் வரை சென்று விற்பனை செய்து வருகிறேன். உழைப்பே நம்பிக்கை என்று தாரக மந்திரத்தில் வாழ்ந்து வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கத்தில் மாவட்ட பொரு ளாளராக இருந்து வருவதுடன் மாற்றுத் திறனாளிகள் அடிப்படை உரிமைகளுக்காக டெல்லி, சென்னை என 70க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன். பாடல் பாட தெரியும் என்பதால் தனியார் தொலைக் காட்சியில் நடைபெற்ற போட்டி யிலும் பங்கேற்றுள்ளேன்,

இவ்வாறு அவர் கூறினார்.

ஊனம் என்று நினைத்து ஒதுங்கி முடங்கி விடாமல், தன்னம்பிக்கையை தளர விடாமல் மக்கள் சேவையாற்றி பல்வேறு முத்திரைகளை பதித்து வரும் இவரை போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் ஒரு 'சல்யூட்' செய்வோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com