search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500; முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    மாற்றுத்திறனாளி சிறுமிக்கு செயற்கை கால் வழங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500; முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலனாக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
    • மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 பெறும் பயனாளி நெகிழ்ச்சியடைந்தார்.



    மாற்றுத் திறனாளி கருப்பையா

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திற னாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் மாற்றத்தை கொண்டு வரும் திறனாளிகள் என்ற உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு அவர்களுக்கான திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கைபேசி, கணினி போன்ற எண்ணற்ற பயிற்சிகள் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித் தொகை, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது.

    காது கேளாத மன வளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கு அடிப்படை பயிற்சி, கட்டண மில்லா பஸ் பயண அட்டை, மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கால் மற்றும் நவீன ஒப்பு காதொலி கருவி, முடம் நிக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம் வட்டத்தில் 1583 மாற்றுத்திறனாளி களுக்கும்,ராமேசுவரம் வட்டத்தில் 429 மாற்றுத்திற னாளிகளுக்கும், திருவாடானை வட்டத்தில் 1033 மாற்றுத்திறனாளிக ளுக்கும், கீழக்கரை வட்டத்தில் 803 மாற்றுத்திற னாளிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 725 மாற்றுத்திறனாளிகளுக்கும், கடலாடி வட்டத்தில் 1138 மாற்றுத்திறனாளிகளுக்கும், கமுதி வட்டத்தில் 838 மாற்றுத்திறனாளிகளுக்கும், முதுகுளத்தூர் வட்டத்தில் 1001 மாற்றுத்திறனாளி களுக்கும், பரமக்குடி வட்டத்தில் 1336 மாற்றுத்திற னாளிகளுக்கும் என மொத்தம் 8886 மாற்றுத்திற னாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 32 ஆயிரத்து 378 நபர்கள் மாற்றுத்திறன் கொண்ட வர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள வழங்கப்பட்டுள்ளது.

    14 ஆயிரத்து 905 நபர் களுக்கு மத்திய அரசின் UDID திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப் பட்டுள்ளது. கடந்த மே 2021 முதல் பிப்ரவரி 2023 வரை மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட வங்கிக்கடன் மானியமாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 528 மதிப்பிலான மானியத் தொகையும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38.63 லட்சம் மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9.30 லட்சம் மதிப்பிலும், நவீன செயலிகளுடன் கூடிய கைபேசி 124 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.50 லட்சம் மதிப்பிலும், முடநீக்கியல் கருவி 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 120 மதிப்பிலும், 3 சக்கர சைக்கிள் மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.90 ஆயிரத்து 500 மதிப்பி லும், சக்கர நாற்காலி 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து10 ஆயிரத்து 600 மதிப்பிலும் என 467 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 90 ஆயிரத்து 748 மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாதாந்திர உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளி கருப்பையா கூறும்போது, மூளை வாத முடக்கு நோயால் பாதிக்கப் பட்டேன். மாற்றுதிறனாளி களுக்கான அடையாள அட்டை பெற்று மாதம் ரூ.1,000 பெற்று வந்தேன். தற்போது முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் முதல் 1,500 வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருவதன் மூலம் எனக்கு ரூ.1,500 கிடைக்கிறது.

    மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாற்றுத்திற னாளிகளின் பாதுகாவ லனாக திகழ்ந்து வருகின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன் றியை தெரிவித்துக் கொள்கி றேன் என்றார்.

    இந்த தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி செய்தி தொடர்பு அலுவலர் விஜய குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×