search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue"

    • அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
    • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கே சுமார் 120 வடமாநில பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட காரணத்தினால் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் சுகாதார தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கொண்டு கூட்டு துப்புரவு பணி மற்றும் தீவிர கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

    இதற்காக கொசுப்புகை மருந்து வாகனம் மற்றும் 4 புகை மருந்து மூலம் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    டவுன் மார்க்கெட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    டவுன் மண்டலத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோ முன்னிலையில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    டவுன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அங்கு நடந்த முகாமில் டெங்கு பாதிப்பு குறித்து விளக்கி பேசினார்.

    பின்னர் அவரது மேற்பார்வையில் 4 கொசு மருந்து எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது. டவுன் மார்க்கெட் பகுதிகள் முழுவதும், நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கட்டிட பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்

    மேஸ்திரி அருணாச்சலம், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் பரப்புரையாளர்கள் மாயாண்டி, சோமசுந்தரம், வேலு பிரபாகரன் மற்றும் பணியாளர்கள், பயிற்சி கல்லூரி மாண வர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

    • இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
    • ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட தட்சிணாமூர்த்தி நகர், தேவனாம்பட்டினம் போட்மன் தெரு மற்றும் வண்டிப்பாளையம் குழந்தை காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாகன டயர்கள் போன்ற வற்றில் மழை நீர் தேங்கு வதாலும் வீடுகளில் பயன் படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மெஷின்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமள வில் இந்நோயினை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியா கின்றன.

    இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவை யற்ற பொருட்களை அப்புறப் படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பது, நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்து வதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்க ளின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாக வும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார். 

    • மதுரையில் தீவிரமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • போதிய மாத்திரைகள், மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உயிரி ழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக அறிகிறோம்.

    மதுரையில் ஒரு நாளில் 3குழந்தைகள் 4சிறுவர்கள் மொத்த 15பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை, தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகி றார்கள்.

    தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பாதிப்பு அதனால் பாதாளச் சாக்கடை பாதிப்பு குடிநீரில் சாக்கடை கலப்பது போன்ற வைகள் நடைபெறுகிறது.

    மேலும் பாதாள சாக்கடை பதிப்பு மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சாலை ஓர தெருக்களில் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.

    மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதும் மழை போல் தேங்கும் குப்பைகளால் தொற்று நோய்கள் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மதுரையில் முக்கிய கால்வாய்க ளான சிந்தா மணி, கிருது மால், பந்தல்குடி, அனுப்பானடி மற்றும் பனையூர் உள்ளிட்ட முக்கிய கால் வாய்கள் பல ஆண்டு களாக தூர்வாரப்படா மல் உள்ளது.

    இந்த கால்வாய்களில் கழிவு சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் வாய்க்கால் ஆக்கிரமித்து உள்ளது.

    மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகம் வேகமாக பரவி வரும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

    மதுரை மாநகரில் உள்ள பிரதான கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கால்வாய்கள் குப்பைத் தொட்டிகளாக கழிவு நீர் தேங்கும் குளமாக மாறி வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மூலம் டெங்கு பாதித்த பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை எடுத்து தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தினசரி வருதை உறுதிப் படுத்த வேண்டும். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்ற வற்றை பொது மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் போதிய மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்டவை தேவை யானதுக்கு மேல் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    மதுரை மாநகரில் மற்றும் புறநகரிலும் திடீர் காய்ச்ச லால் மக்கள் அவதிப்படு வதை மருத்துவ சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்ச்சி பிரசாரம் செய்து பொது மக்களின் அச்சத்தை தவிர்த்திடும் வகையில் சுகாதாரத்துறை ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது
    • சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனிக்காசலம் தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்துகளை தெளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்குதல் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக அனைத்து அரசுமருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 8 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவ ர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்ப ப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு பாதிக்கப்பட்ட வர்களுக்கு பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் டெங்கு சிகிச்சை பெறு பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் சுற்றுப்புறங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை என ஈடுபட்டுள்ளனர்.

    • அத்திமரப்பட்டி விலக்கில் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் அருகில் உள்ள சாக்கடையில் வீணாக ஓடுகிறது.
    • டெங்கு பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை வழியாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்சாலை பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    குழாய் உடைப்பு

    இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு முத்தையாபுரம் -ஸ்பிக் நகர் இடையே அத்திமரப்பட்டி விலக்கில் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் அருகில் உள்ள சாக்கடையில் வீணாக ஓடி வருகிறது. சில சமயங்களில் சாக்கடை நிரம்பி குடிநீர் சாலைகளில் பெருகி மழை நீர் போல தேங்கி நிற்கிறது.

    அதில் தற்போது கொசு புழுக்கள் அதிகம் உற்பத்தியாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    கொசு ஒழிப்பு

    டெங்கு பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு பணியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீர் மூலம் இந்த கொசு உற்பத்தியாவதால் இதை ஒழிக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ஆனால் தூத்துக்குடியில் நெடுஞ்சாலை துறையும், குடிநீர் வடிகால் வாரியமும் அலட்சியப் போக்குடன் செயல்படுவதால் கடந்த 3 மாதமாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதுடன், தற்போது டெங்கு பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் மையமாக மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தொற்று நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதுடன் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுவை காட்சியளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் டெங்கு பாதித்து 2 பெண்கள் பலியாகியுள்ளது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு டெங்கு பாதிப்பை முன்னெச்சரிக்கையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுவை காட்சியளிக்கிறது.

    புதுவை அரசு டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி துறைகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    கொசு ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில்மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
    • டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 35 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் ஒருவருக்கும், அறந்தாங்கி பகுதியில் மேற்பனைக்காடு குளமங்கலம் வடக்கு தெரு,எழில் நகர், பூவை உள்ளிட்ட நகர பகுதிகளில் மேலும் 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் 20 டெங்கு களப்பணியாளர்களும், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 10 களப்பணியாளர்களும், நகராட்சி பகுதிகளில் 30 களப்பணியாளர்களும் டெங்கு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் 2 சிறுமிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. மேலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தினர்.

    திருவண்ணாமலையில் 5 பேர் டெங்கு அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

    பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது.
    • தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக காணப்படும்.

    தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் பயப்படக்கூடிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுகாதார தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சல் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பரவுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள். கடந்த சில வாரங்களில் வரும் குழந்தைகளில் பலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக ரத்த பரிசோதனை முடிவு தெரிவிக்கின்றன என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    காய்ச்சல் வயிற்றுப்போக்குடன் வரும் குழந்தைகள் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தால் பாசிட்டிவ் என வருகிறது.

    மழை மற்றும் கடும் வெயில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது. அரசு மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் டெங்கு, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜூலை மற்றும் செப்டம்பர் மாதத்தில் இப்பாதிப்பு பொதுவாக அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டைபாய்டு காய்ச்சல் பாதிக்கப்படும் பெரியவர்களுக்கு பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு புற நோயாளிகளாக வந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    குழந்தைகள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    டைபாய்டு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றக்கூடியதாகும். இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீரில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் வெளி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொற்றை ஏற்படுத்துகிறது.

    குடிக்கும் நீரில் இருந்து வைரஸ் கிருமி பாதிப்பை உண்டாக்குகிறது. சுகாதார மற்ற தண்ணீரை பருகும் போது பாதிப்பு ஏற்படும். அதிகபட்சமாக 104 டிகிரி வரை காய்ச்சல் தாக்கும். தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

    டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமான சுத்திகரிப்பு செய்யாத குடிநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வெளியில் சாப்பிடும்போது பழங்கள், பச்சை காய்கறிகள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    வெளியில் சாப்பிடும் உணவுகள் சூடாக உட்கொள்ள வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடக்கூடாது. தெருவோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கும் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள கூடாது.

    தொடர் வயிற்றுப் போக்கு, கடும் ஜூரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    இவ்வாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    • 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
    • அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தென் மேற்கு பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.

    தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    200 ஊழியர்கள்

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

    மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.

    429 ரூபாய் ஊதியம்

    இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், தடுக்கும் முறைகள் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி மருத்துவ அலுவலர்கள் பேசினர்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் இளம் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்லூரியின் தேசிய அகத்தர மதிப்பிட்டு குழு சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மேஜர் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

    திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திலகேஷ் வர்மா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், தடுக்கும் முறைகள் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், ராஜராஜேஸ்வரி, இளம் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர்கள் பிருந்தா, கிரிஜா மற்றும் கல்லூரியின் அகத்தர மதிப்பிட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×