search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    கடலூரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்த காட்சி.

    கடலூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு

    • இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
    • ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட தட்சிணாமூர்த்தி நகர், தேவனாம்பட்டினம் போட்மன் தெரு மற்றும் வண்டிப்பாளையம் குழந்தை காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாகன டயர்கள் போன்ற வற்றில் மழை நீர் தேங்கு வதாலும் வீடுகளில் பயன் படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மெஷின்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமள வில் இந்நோயினை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியா கின்றன.

    இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவை யற்ற பொருட்களை அப்புறப் படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பது, நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்து வதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்க ளின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாக வும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×