என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "college student missing"
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வடக்கு கஞ்ச கொல்லை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகள் வசந்தராணி (வயது17).
இவர் கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை
இதை தொடர்ந்து வசந்த ராணியின் தாய் வசந்தா காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தராணியை தேடிவருகிறார்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சாந்தி (வயது 28). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற சாந்தி இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி சாந்தி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.
இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.
இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் உள்ள திருவனந்தபுரம் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருடைய மகள் பவானி (வயது21). தனியார் கல்லூரியில் படித்து முடித்த இவர், அதற்கான சான்றிதழை வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
அதன் பிறகு பவானி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ராஜபாளையம் தெற்கு போலீசில் தெய்வேந்திரன் புகார் செய்தார்.
ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மனைவி பெத்தனாட்சி செல்வி (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெத்தனாட்சி செல்வி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் ராஜபாளையம் தெற்கு போலீசில் முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான பவானி மற்றும் பெத்தனாட்சி செல்வியை தேடி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் தேவிகா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி இளங்கோவன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில் தனது மகளை மன்னார்குடியைச் சேர்ந்த கபாலி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று கந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி தேவிகாவை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவருடைய மகள் திவ்ய பாரதி (வயது 20).
இவர், கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி திவ்ய பாரதி வீட்டில் தனியார் இருந்தார்.
அவருடைய பெற்றோர் கடைக்குச் சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் திவ்யபாரதி இல்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் பலன் கிடைக்கவில்லை.
இது குறித்து கேணிக்கரை போலீசில், திவ்யபாரதியின் தாயார் பாண்டியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவரத்தினம் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்ய பாரதியை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்