search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்
    X

    ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்

    கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் உள்ள திருவனந்தபுரம் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருடைய மகள் பவானி (வயது21). தனியார் கல்லூரியில் படித்து முடித்த இவர், அதற்கான சான்றிதழை வாங்கி வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    அதன் பிறகு பவானி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ராஜபாளையம் தெற்கு போலீசில் தெய்வேந்திரன் புகார் செய்தார்.

    ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மனைவி பெத்தனாட்சி செல்வி (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெத்தனாட்சி செல்வி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் ராஜபாளையம் தெற்கு போலீசில் முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான பவானி மற்றும் பெத்தனாட்சி செல்வியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×