search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையத்தில் பள்ளி மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை
    X

    வேலாயுதம்பாளையத்தில் பள்ளி மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை

    வேலாயுதம்பாளையத்தில் பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கண்டியானூர், கந்தசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் . இவரது மகள் ஜனனிஸ்ரீ (வயது15). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.  

    இந்நிலையில் மறுதேர்வு எழுதுவதற்காக வேலாயுதம்பாளையம்- கொடுமுடி சாலையில் உள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் கடந்த 1-ந் தேதி சேர்ந்தார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் முருகனும் அவரது உறவினர்களும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் ஜனனிஸ்ரீ கிடைக்கவில்லை.

    இது குறித்து முருகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் வழக்குபதிவு செய்து ஜனனிஸ்ரீயை எவரேனும் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது கணிதபாட தோல்வி பயத்தில் எங்கும் சென்று விட்டாரா? என பல கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×