search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி மாயம்
    X

    ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி மாயம்

    வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவருடைய மகள் திவ்ய பாரதி (வயது 20).

    இவர், கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி திவ்ய பாரதி வீட்டில் தனியார் இருந்தார்.

    அவருடைய பெற்றோர் கடைக்குச் சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் திவ்யபாரதி இல்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

    இது குறித்து கேணிக்கரை போலீசில், திவ்யபாரதியின் தாயார் பாண்டியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவரத்தினம் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்ய பாரதியை தேடி வருகிறார்.

    Next Story
    ×