search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி மாயம்- தந்தை போலீசில் புகார்
    X

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி மாயம்- தந்தை போலீசில் புகார்

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் தேவிகா (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    கடந்த 16-ந் தேதி வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி இளங்கோவன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதில் தனது மகளை மன்னார்குடியைச் சேர்ந்த கபாலி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று கந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி தேவிகாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×