search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civic Polls"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சிகளுக்கு நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட தேர்தலில் இன்று பிற்பகல் நிலவரப்படி பாரமுல்லா மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.
     
    பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


    62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் இன்று நண்பகல் 12 மணிவரை பதிவான வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    பாரமுல்லா மாவட்டத்தில் 59.6 சதவீதம், சம்பா மாவட்டத்தில் 59.1% சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 2.5% சதவீதம், ஸ்ரீநகரில் 1.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    புதிது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள் என்று விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். #TNMinister #RajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

    அ.தி.மு.க. சோதனையான காலகட்டத்தை தாண்டி இயங்கி கொண்டு இருக்கின்றது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சிலர் பகல் கனவு கண்டனர். இன்று கட்சியும், ஆட்சியும் பாதுகாப்பாக உள்ளது.

    கட்சி, இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில்தான் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோன்று வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெறும் வகையில் பூத் ஏஜெண்ட் நியமிக்கப்பட வேண்டும். ஒரு பூத் ஏஜெண்ட் 100 வாக்குகளை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். உழைக்கக்கூடிய அத்தனை பேருக்கும் பதவி காத்திருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்குதான் வாக்களிக்க உள்ளார்கள்.

    புதிது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள். கமல்ஹாசன், ரஜினி ஆரம்பித்துள்ள கட்சி ஒரு அமாவாசைக்கு கூட தாங்காது. அமாவாசையோடு காணாமல் போய் விடும்.

    தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். தி.மு.க. எதிர்கட்சி வரிசையில் இருக்கும். ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், தலைவர், துணைத்தலைவர் பதவிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    ஆலோசனை கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராஜவர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #TNMinister #RajendraBalaji
    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #CivicPolls
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மேலும் நேற்று தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை என்பது வரவேற்கத்தக்கது. அவர் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்க போகிறார் என்பதை தெளிவாக அறிவித்துள்ளார். காவி தான் இன்றைக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி ஏற்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றத்தால் அறிவிக்க செய்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனை சேமிக்க முடியாமல் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க கடைமடை பகுதிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம்.

    தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தாலும் முறைகேடுகள் நடந்து பணிகள் நடக்காததால் தான் நீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை. மேலும் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம்.


    தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறும் கருத்து ஏற்படையது. ஆனால் தகுந்த விழிப்புணர்வு அளித்து கால அவகாசம் அளித்து, அதன் பின்னர் அபராதம் விதிக்க வேண்டும். இப்போதே அதை கட்டாயமாக்க கூடாது.

    தி.மு.க.வில் குடும்ப அரசியலால் தான் ஸ்டாலின் தலைவராக வந்துள்ளார் என்ற அ.தி.மு.க.வின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. கருணாநிதி 15 வயதில் தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் ஸ்டாலின் 14 வயது முதலே அரசியலுக்கு வந்து படிப்படியாக பல்வேறு வளர்ச்சியை பெற்றுள்ளார்.

    கேரளாவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும் அரசு கேட்ட நிவாரண தொகை ரூ.21 ஆயிரம் கோடியில் 600 கோடிதான் நிதி ஒதுக்கியுள்ளது வேதனைக்குரியது. அரசியல் பாகுபாடு பார்க்காமல் உரிய நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும் அரபு நாடுகள் அளிக்கும் நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தற்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பணம் சம்பாதிப்பது தான் ஒரே குறிக்கோளாகவும் அஜெண்டாவாகவும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது. தோல்வி பயத்தால் அவர்கள் நடத்த மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #CivicPolls #LocalBodyElection
    அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். #EVKSElangovan #ADMK
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழாவை காங்கிரசார் இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

    சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நவ இந்தியாவை உருவாக்கியவர் நேரு. அவர் வழியில் வந்த ராஜீவ் நவீன இந்தியாவை உருவாக்கினார். கம்ப்யூட்டர், தொலைத்தொடர்பில் புரட்சியை செய்தவர்.

    கிராமங்கள் முன்னேற பஞ்சாயத்துராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதி நேரடியாக வந்தது.


    அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கிராமங்களுக்கு வரவேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்றுபோனது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசுக்கு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லை. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறார்கள். எப்போது தேர்தல் நடத்தினாலும், எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் தென் சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், வி.ஆர்.சிவராமன், பாலகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #EVKSElangovan #ADMK
    கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார். #HighCourt #CivicPolls #RSBharathi
    சென்னை:

    கோர்ட்டு உத்தரவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் அண்டு அக்டோபர் மாதம் முறையாக தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் மாநில தேர்தல் ஆணையம் எஸ்.டி.பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை ஒதுக்காமல் தேர்தல் நடத்த முற்பட்டதால் அதை சரி செய்து தேர்தலை நடத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.

    பின்னர் இதை ஒழுங்குப்படுத்திய தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் நடத்துவதாக கூறியது. அதன் பிறகு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிவடையவில்லை என்று தேர்தல் ஆணையம் காரணம் கூறியது.

    இப்படி ஒவ்வொரு முறை வழக்கு வரும் போதெல்லாம் காரணம் கூறி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வந்தனர்.


    கடந்த முறை இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி முன்பு விசாரணைக்கு வந்தபோது 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவும் பின்பற்றப்படவில்லை.

    இதனால்தான் தி.மு.க. சார்பில் நாங்கள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட்டு நீதிபதிகள் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

    தேர்தல் அட்டவணையை 6-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

    எனவே இந்த சூழ்நிலையில் அக்டோபர் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.

    கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கேட்டால் அதை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது. எனவே தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HighCourt #CivicPolls #RSBharathi
    வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும் என கவிஞர் சினேகன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Snehan
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் வந்த கவிஞர் சினேகன் நிருபர்களிடம் கூறியதாவது, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கர்நாடகா சென்றது இணக்கமான உறவை மேம்படுத்தவேண்டும் என்பதற்காகவே. இது மனிதாபிமானம் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சி.

    கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியலில் கொள்ளை ரீதியாக மாறுபட்டுள்ளனர். சினிமாவில் எப்போதும் போல் நட்புரீதியாக கைகோர்த்துள்ளனர். 2 பேருக்கும் விளம்பரம் தேட தேவையில்லை.

    எவ்வளவு எதிர்ப்புகள் வருகிறதோ அது விளம்பரமாக மாற்றப்படும். பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்புகளை மீறி சிலபேருக்கு மட்டும் தெரிந்த எங்களை உலகமறிய செய்துள்ளது. பா.ஜனதா கட்சிக்காக கமல் வேலை செய்யவில்லை. அவர் எப்போதும் கமலாகவே இருக்கிறார்.

    நாங்கள் மக்களின் ஆதரவாளர்களாக மட்டுமே உள்ளோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும். இதற்காக பல கிராம சபைகளுக்கு சென்றுவருகிறோம். மக்கள் கூட்டணியை விட பெரியது எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Snehan

    ×