search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local Body Election"

    • உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது.
    • தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.

    தானே :

    சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார். இந்தநிலையில் சிவசேனா அதிருப்தி அணியினர் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் விரைவில் மும்பை, தானே உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளுக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் சிவசேனா அதிருப்தி அணி தனித்து செயல்பட வாய்ப்பு உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தானேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    சிவசேனா அதிருப்தி அணி தான் உண்மையான சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தானே உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதாவுடன், உண்மையான சிவசேனா(அதிருப்தி அணி) கூட்டணி அமைத்து போட்டியிடும்.

    தானே மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. வாக்காளர்கள் சரியானதை நிச்சயம் தேர்வு செய்வார்கள்.

    பாலாசாகேப் பால் தாக்கரே எப்போதுமே பா.ஜனதாவுடன், சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார். சிவசேனா காங்கிரசுடன் அல்லது தேசியவாத காங்கிரசுடன் இணைவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. நாங்கள் பாலாசாகேப்பை பின்பற்ற போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
    • ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

    பெரியகுளம் நகர்மன்ற தேர்தலில் 26-வது வார்டு தி.மு.க உறுப்பினராக ராஜாமுகமது போட்டி யிட்டார். அவர் தனது வேட்புமனுதாக்கலில் நகராட்சி கடையை ஒப்பந்தம் எடுத்தது பற்றி குறிப்பிடவில்லை. இதுகுறித்து வந்த புகாரி ன்பேரில் ராஜா முகமது தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

    இதேபோல் மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர், மொட்டனூத்து, ரங்கசமுத்திரம், சின்ன ஓவுலாபுரம், முத்தலா ம்பாைற, தும்மக்குண்டு, டி.வாடிப்பட்டி ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 9 பதவிகளுக்கு நேற்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

    வருகிற 27-ந்தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28-ந்தேதி வேட்புமனு பரிசீலனையும், 30-ந்தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நடத்தை விதிமுறைகள் அமல்படு த்தப்படு வதாகவும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
    • காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    சென்னை:

    உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் என மொத்தம் 510 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான அறிவிக்கை 20-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தாங்கள் தடுக்கவில்லை என்று தி.மு.க. பொறுப்பாளர் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #LocalBodyElection
    தரங்கம்பாடி:

    நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் இல்ல திருமண விழா திருக்கடையூர் கலைஞர் அரங்கில் இன்று நடந்தது.

    திருமண விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

    இன்று நடைபெறும் சீர்திருத்த திருமணம், தி.மு.க. ஆட்சிக்கு வராத காலத்தில் சட்டமாக்கப்படவிலலை. கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக சீர்திருத்த திருமணங்களை சட்டமாக்கினார்.

    அதை நினைவுகூர்ந்து தமிழர்கள் முறைபடியும், தமிழ் முறைப்படியும் இன்று சீர்திருத்த திருமணங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். கலைஞர் பிறந்த ஊர் திருக்குவளை என்றாலும் நாகை மாவட்டத்தில் தான் பிறந்தார்.

    தி.மு.க. தலைவராக நான் பொறுப்பேற்ற பிறகு கலைஞர் பிறந்த ஊரில் முதன் முறையாக சீர்திருத்த திருமணம் நடத்துவது பெருமை அளிக்கிறது.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்பது எடப்பாடிக்கும், தினகரனுக்கும் உள்ள பிரச்சனையாக இருக்கலாம். இதனால் தி.மு.க.வுக்கு எந்த விதத்திலும் பாதிப்போ, சாதகமோ இல்லை. இது அவர்களுடைய பிரச்சனை.

    18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் என 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த முதல்- அமைச்சர் எடப்பாடி தயார் என கூறுகிறார்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத எடுபிடி அரசு, 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த கூறுவது எந்த தகுதியும் இல்லை.

    நீதிமன்றம் பல்வேறு காலக்கெடு கொடுத்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. சாக்குபோக்கு காரணங்களை கூறி தள்ளி வைத்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் தி.மு.க. தான் என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தி.மு.க. உண்மையிலேயே வழக்கு தொடர காரணம் சட்ட விதிகளின்படி இட ஒதுக்கீடு அனைத்தும், நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று தான் தேர்தல் ஆணையம் மீது வழக்கு போட்டோம். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் தடுக்கவில்லை. இதற்கு பதில் சொல்ல வேண்டிய உரிமை தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால் எடப்பாடி சொல்கிறபடி தேர்தல் ஆணையம் செய்கிறது. தலைமை செயலாளர் உள்ளாட்சி தேர்தலை நடத்த தேதி குறிப்பிடாமல் வெறுமனே அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி மக்கள் விரோதமாக செயல்பட்டு வருவதால் எடுபிடி அரசு என்று கூறியதால் என்மீது தமிழக அரசு 7 வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதை நான் சந்தித்து தான் வருகிறேன்.

    மத்திய அரசுடன் சேர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதால் எடுபிடி அரசு என்று சொல்லாமல் எப்படி அழைப்பது?

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி மீது சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. வருகிற தேர்தல்களில் வெற்றி பெற்று ஊழலில் சம்பந்தப்பட்ட எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள்.

    தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 100-க்கும் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் சுகாதார துறை எந்த கவனமும் செலுத்தாமல் உள்ளது. முடிந்தவரை எல்லாவற்றையும் கொள்ளையடித்து சுருட்டி கொள்வது என்று உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி அமையும். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் இந்திய கம்யூ.செயலாளர் முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி மணி சங்கர் அய்யர், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவாணன், பொன்முடி, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  #DMK #MKStalin #LocalBodyElection

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. #JammuAndKashmir #KashmirElection #KashmirULBPolls
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16-ம் தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.



    இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு மாவட்டத்தில் பதிவான வாக்குகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர். இதேபோல், பிரதான கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #KashmirElection #KashmirULBPolls

    உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழ்நாடு சீரழிந்து உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.#Ramadoss #PMK #TNLocalBodyElection

    சென்னை:

    ‘உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கிறோமா? என்ற தலைப்பில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

    அடையாறில் நடந்த இந்த கருத்தரங்கத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். ஏ.கே. மூர்த்தி வரவேற்றார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்களின் மேம்பாட்டுக்காக ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக பல சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முறையாக பின்பற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் உரிய காலத்தில் நடத்தாததால் அனைத்து பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. முறையாக தேர்தலை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். அதன்மூலம் தான் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கருத்தரங்கத்திற்கு மாநில துணை பொது செயலாளர்கள் வேளச்சேரி சகாதேவன், ராதா கிருஷ்ணன்,வி.ஜே பாண்டியன், முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் பழனிதுரை, முன்னாள் பஞ்சாயத்து இணை இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    மாவட்ட செயலாளர்கள் அடையாறு வடிவேல், சிவகுமார், மன்னை சத்யா, வெங்கடேச பெரியார், நிர்வாகிகள் கன்னியப்பன், பி.எஸ்.மூர்த்தி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண் டனர். சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார். #Ramadoss #PMK #TNLocalBodyElection

    காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில், பயங்கரவாதிகள் நடமாட்டம் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியில் வெறும் 8.3 சதவீத ஓட்டுகளே பதிவாகின. #JammuKashmirElection
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், முக்கிய கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. அரசியல் சட்டத்தின் 35ஏ பிரிவை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்த முடிவை எடுத்தன.

    அதே சமயத்தில், தேர்தலில் பங்கேற்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 2 பேர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை தவிர்த்தனர். வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் பல்வேறு வார்டுகளில் ஒரு வேட்பாளர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

    இந்த சூழ்நிலையில், பலத்த பாதுகாப்புடன், நேற்று முதல்கட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பயங்கரவாதிகள் நடமாட்டம் நிறைந்த பள்ளத்தாக்கு பகுதியில் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

    அங்கு மொத்தம் 152 வார்டுகள் உள்ளன. அவற்றில் 69 வார்டுகளில் போட்டியின்றி ஏற்கனவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். எனவே, மீதி உள்ள 83 வார்டுகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 84 ஆயிரத்து 692 வாக்காளர்களில் வெறும் 7 ஆயிரத்து 57 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது, வெறும் 8.3 சதவீதம் ஆகும்.

    பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஸ்ரீநகர் மாநகராட்சியில் 30 ஆயிரத்து 74 வாக்காளர்கள் இருந்தும், ஆயிரத்து 862 பேர் மட்டுமே வாக்களித்தனர். பட்கம் மாவட்டத்தில் 17 சதவீதமும், அனந்தநாக் மாவட்டத்தில் 7.3 சதவீதமும், பாரமுல்லா மாவட்டத்தில் 5.7 சதவீதமும், பந்திப்போரா மாவட்டத்தில் 3.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இருப்பினும், குளிர் பிரதேசங்களான கார்கில், லே ஆகியவற்றில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கார்கிலில் 78 சதவீத வாக்குகளும், லேவில் 52 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    பந்திப்போரா மாவட்டத்தில் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. அதில், பா.ஜனதா வேட்பாளர் காயம் அடைந்தார். அதைத்தவிர, ஓட்டுப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்ததாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #JammuKashmirElection
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 63.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #JammuKashmirElection
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றது. 11 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 584 வாக்குச்சாவடிகளில்  63.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தித்தி இருந்தனர். அதனை மீறி சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் இருந்த சில வாக்குச்சாவடிகளில் வெறும் 1 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. 

    தேர்தலை ஒட்டி ராணுவம், துணை ராணுவம், மாநில போலீசார் என பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.  #JKElection #LocalBody
    காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. #JammuKashmir #LocalBodyElection
    ஸ்ரீநகர்:

    கவர்னர் ஆட்சி நடந்து வரும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட 149 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்களுக்காக 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    அங்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இந்த தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பதை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

    இதனால் தேர்தலின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் ஜம்மு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் அவர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

    தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  #JammuKashmir #LocalBodyElection
    பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். #Punjab #LocalBodyElection #Congress
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 22 ஜில்லா பரிஷத்களில் மொத்தமுள்ள 353 மண்டலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 331 இடங்களிலும், சிரோன்மனி அகாலிதளம் 18 இடங்களிலும், பாஜக மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

    இதேபோல், 150 பஞ்சாயத்து சமிதிகளில் மொத்தமுள்ள 2899 மண்டலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு 2351 இடங்களில் காங்கிரசும், சிரோன்மனி அகாலி தளம் 353 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



    உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் கூறுகையில், எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி போய்ச்சேரும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து விஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர் என்பதேயே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார். #Punjab #LocalBodyElection #Congress
    கர்நாடகாவில் மைசூரு, தும்கூரு ஆகிய 2 மாநகராட்சிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுகிறது. #KarnatakaLocalBodyElections
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மைசூரு, தும்கூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ளது. இந்த மாநகராட்சியில் பாரதிய ஜனதா 23 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும், ஜே.டி.எஸ். 4 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.

    பாரதிய ஜனதா கவுன்சிலர் மேயராக உள்ளார். சிவமொக்கா மாநகராட்சியான பிறகு நடைபெற்ற முதல் தேர்தலில் பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது.

    மைசூரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பாரதிய ஜனதா 22 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் 19 இடங்களையும், ஜே.டி.எஸ். 18 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் பிடித்துள்ளன.

    இந்த மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க 33 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கட்சிகள் 37 இடங்களை பிடித்துள்ளன. இதனால் இந்த மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூட்டணியில் எந்த கட்சி அதிக இடங்களை பெறுகிறதோ அந்த கட்சிக்கு தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே காங்கிரஸ்- ஜே.டி.எஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மைசூரு மாநகராட்சியில் காங்கிரஸ் மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    இதேபோல தும்கூரு மாநகராட்சியிலும் காங்கிரசை சேர்ந்தவர் மேயராகிறார். இந்த மாநகராட்சியில் மொத்தம் உள்ள 35 இடங்களில் பாரதிய ஜனதா 12 இடங்களையும், காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 10 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்த மாநகராட்சியில் தங்களுக்கு மேயர் பதவியை ஜே.டி.எஸ். விட்டுத்தர வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். இதை ஜே.டி.எஸ். கட்சி ஏற்றுக்கொண்டது. #KarnatakaLocalBodyElections
    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #CivicPolls
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மேலும் நேற்று தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை என்பது வரவேற்கத்தக்கது. அவர் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்க போகிறார் என்பதை தெளிவாக அறிவித்துள்ளார். காவி தான் இன்றைக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி ஏற்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றத்தால் அறிவிக்க செய்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனை சேமிக்க முடியாமல் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க கடைமடை பகுதிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம்.

    தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தாலும் முறைகேடுகள் நடந்து பணிகள் நடக்காததால் தான் நீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை. மேலும் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம்.


    தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறும் கருத்து ஏற்படையது. ஆனால் தகுந்த விழிப்புணர்வு அளித்து கால அவகாசம் அளித்து, அதன் பின்னர் அபராதம் விதிக்க வேண்டும். இப்போதே அதை கட்டாயமாக்க கூடாது.

    தி.மு.க.வில் குடும்ப அரசியலால் தான் ஸ்டாலின் தலைவராக வந்துள்ளார் என்ற அ.தி.மு.க.வின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. கருணாநிதி 15 வயதில் தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் ஸ்டாலின் 14 வயது முதலே அரசியலுக்கு வந்து படிப்படியாக பல்வேறு வளர்ச்சியை பெற்றுள்ளார்.

    கேரளாவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும் அரசு கேட்ட நிவாரண தொகை ரூ.21 ஆயிரம் கோடியில் 600 கோடிதான் நிதி ஒதுக்கியுள்ளது வேதனைக்குரியது. அரசியல் பாகுபாடு பார்க்காமல் உரிய நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும் அரபு நாடுகள் அளிக்கும் நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தற்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பணம் சம்பாதிப்பது தான் ஒரே குறிக்கோளாகவும் அஜெண்டாவாகவும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது. தோல்வி பயத்தால் அவர்கள் நடத்த மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #CivicPolls #LocalBodyElection
    ×