தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல்

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

பெரியகுளம் நகர்மன்ற தேர்தலில் 26-வது வார்டு தி.மு.க உறுப்பினராக ராஜாமுகமது போட்டி யிட்டார். அவர் தனது வேட்புமனுதாக்கலில் நகராட்சி கடையை ஒப்பந்தம் எடுத்தது பற்றி குறிப்பிடவில்லை. இதுகுறித்து வந்த புகாரி ன்பேரில் ராஜா முகமது தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதேபோல் மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர், மொட்டனூத்து, ரங்கசமுத்திரம், சின்ன ஓவுலாபுரம், முத்தலா ம்பாைற, தும்மக்குண்டு, டி.வாடிப்பட்டி ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 9 பதவிகளுக்கு நேற்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

வருகிற 27-ந்தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28-ந்தேதி வேட்புமனு பரிசீலனையும், 30-ந்தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நடத்தை விதிமுறைகள் அமல்படு த்தப்படு வதாகவும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com