search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmir Civic polls"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 157 இடங்களிலும், பா.ஜ.க. வேட்பாளர்கள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். #Congresswon157seats #KashmirCivicpolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக நகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இன்றிரவு 8 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர்கள் 157 இடங்களிலும், பா.ஜ.க. வேட்பாளர்கள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    78 இடங்களில் போட்டியின்றியும் 79 இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வாங்கியும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 76 இடங்களில் போட்டியின்றியும் 24 இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வாங்கியும் வெற்று பெற்றுள்ளனர்.

    இதேபோல், சுயேட்சை வேட்பாளர்கள் 75 இடங்களில் போட்டியின்றியும் 103 இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வாங்கியும் வென்றுள்ளனர். #Congresswon157seats #KashmirCivicpolls
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சிகளுக்கு நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட தேர்தலில் இன்று பிற்பகல் நிலவரப்படி பாரமுல்லா மாவட்டத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டுகட்ட தேர்தல் முடிந்துள்ளது.
     
    பாரமுல்லா, சம்பா, அனந்த்நாக், ஸ்ரீநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 207 வார்டுகளில் 49 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


    62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் இன்று நண்பகல் 12 மணிவரை பதிவான வாக்கு சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    பாரமுல்லா மாவட்டத்தில் 59.6 சதவீதம், சம்பா மாவட்டத்தில் 59.1% சதவீதம், அனந்த்நாக் மாவட்டத்தில் 2.5% சதவீதம், ஸ்ரீநகரில் 1.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Voterturnout #BaramullaVoterturnout
    ×