search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி- கவிஞர் சினேகன்
    X

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி- கவிஞர் சினேகன்

    வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும் என கவிஞர் சினேகன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Snehan
    பெருமாள்மலை:

    கொடைக்கானல் வந்த கவிஞர் சினேகன் நிருபர்களிடம் கூறியதாவது, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கர்நாடகா சென்றது இணக்கமான உறவை மேம்படுத்தவேண்டும் என்பதற்காகவே. இது மனிதாபிமானம் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சி.

    கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியலில் கொள்ளை ரீதியாக மாறுபட்டுள்ளனர். சினிமாவில் எப்போதும் போல் நட்புரீதியாக கைகோர்த்துள்ளனர். 2 பேருக்கும் விளம்பரம் தேட தேவையில்லை.

    எவ்வளவு எதிர்ப்புகள் வருகிறதோ அது விளம்பரமாக மாற்றப்படும். பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்புகளை மீறி சிலபேருக்கு மட்டும் தெரிந்த எங்களை உலகமறிய செய்துள்ளது. பா.ஜனதா கட்சிக்காக கமல் வேலை செய்யவில்லை. அவர் எப்போதும் கமலாகவே இருக்கிறார்.

    நாங்கள் மக்களின் ஆதரவாளர்களாக மட்டுமே உள்ளோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும். இதற்காக பல கிராம சபைகளுக்கு சென்றுவருகிறோம். மக்கள் கூட்டணியை விட பெரியது எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Snehan

    Next Story
    ×