search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chidambaram"

    • சிதம்பரத்தில் ஜவுளி-செருப்பு கடைகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.
    • வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம் பரம் மாலைகட்டி தெரு நகராட்சி நடுநிலை பள்ளி எதிரே வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளி மற்றும் செருப்புக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த துணிகளை திருடி சென்றனர். இேத போன்று செருப்புக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கி ருந்த பணத்தை கொள்ளை யடித்து சென்ற–னர்.

    இந்த வணிகவளாகம் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இன்று காலை கடைகள் திறந்து இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உரியைாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமை யாளர்கள் கடைகளுக்கு விரைந்தனர். அப்போது ஜவுளிக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுபற்றி சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறர்கள். சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்ப–வங்கள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா 27-ந் தேதி தொடங்குகிறது.

    கடலூர்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 28-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 29-ந் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 30-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, ஜூலை 1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6-ந் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு
    • பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் பொது தீட்சிதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம் என்றார்.

    அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும், அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
    • உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதீனங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மற்றபடி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை.

    பொதுக்கோயில்களில் ஏதேனும் பிரச்னைகள், முறைகேடுகள் ஏற்பட்டால் அதில் தலையிடும் உரிமை அறநிலையத்துறைக்கு உண்டு. இது தீட்சிதர்கள், நடராஜர் கோயில் நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

    சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாயத்தின்படியே அறநிலையத்துறை செயல்படும். ஆதீனத்தின் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கணக்குவழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி. எம் ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஞானஇமய நாதன், இளையபெருமாள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் அலுவலர்கள் என ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.

    அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் இருந்தால் பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்துவருகின்றனர்.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறுகையில், அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் ஏற்பட்டதால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது?  விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    பிரதமர் மோடி

    இந்த முடிவின் பொருள் பா ஜ க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.

    இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு. மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா ஜ க அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதேபோல் அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் இருந்தால், பணமதிப்பு நீக்கம் ஒரு இமாலய தவறு என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார்.

    சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வார். சிஏஏ என்பது ஒரு பாரபட்சமான சட்டம் என்பதை ஒப்புக்கொள்வார். 

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான இடைக்கால தடை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
     புதுடெல்லி:

    ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
      
    இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 



    இருவரையும் கைது செய்வதற்கான தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார்.
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் கட்சி தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 497010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு, சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

    இதேபோல், திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எதிர்த்து போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்றார். இதனால் ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்றார்.
    நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் நள்ளிரவில் சோடாபாட்டில் வீசிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கமி‌ஷனராக இருப்பவர் சுரேந்தர்ஷா. இவரது வீடு சிதம்பரம் கனகசபை நகரில் உள்ளது.

    நேற்று இரவு சுரேந்தர்ஷா மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மணிதர்கள் சிலர் அங்கு வந்தனர். பின்பு அவர்கள் வீட்டின் மீது சோடாபாட்டில்களை சரமாரியாக வீசினர். இதில் சோடாபாட்டில்கள் சுவரில் பட்டு உடைந்து நொறுங்கின.

    இந்த சத்தம்கேட்டு நகராட்சி கமி‌ஷனர் சுரேந்தர்ஷா கதவை திறந்து வெளியேவந்து பார்த்தார். உடனே அங்கு நின்ற மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசில் சுரேந்தர்ஷா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய மர்ம மனிதர்கள் யார்? எதற்காக வீசினர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் முதல் 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் முந்துகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram

    மும்பை:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    கடந்த 11-ந்தேதி, 18-ந் தேதி, 23-ந்தேதிகளில் 3 கட்டங்களாக 303 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது” என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒருவர் கனவு காண்பதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி தூக்கத்தில் மட்டும் அல்லாது விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறார். எந்த பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. நான் இதை தைரியமாக கூறுகிறேன். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலும் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக வாக்கு பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.

     


    இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தேசியவாதம் பற்றி மோடி பேசுகிறார். கடந்த 1947, 1964, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போர்களில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. நம்மிடம் உள்ள வலுவான பாதுகாப்பு படையே அதற்கு காரணம். ஒரு தனி மனிதர் அல்ல.

    ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். பணக்காரர்களின் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்காக இல்லை.

    தேர்தல் கமி‌ஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. பிரதமர் மோடி செல்லும் ஒவ்வொரு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கும் ரூ.10 கோடிக்கும் மேல் செலவிடப்படுகிறது. இது குறித்து தேர்தல் கமி‌ஷன் கேள்வி எழுப்பவில்லை. மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தயக்கம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PChidambaram

    பாகிஸ்தான் பற்றி மோடி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்துவிட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Modi #Chidambaram #HateSpeeches
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மோடியின் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி பாகிஸ்தான் பற்றி பேசுவதைக் கேட்டு சோர்வடைந்துவிட்டோம். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன்பாவது, பிரதமர் மோடி முக்கியமான மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவாரா?

    நாட்டில் இப்போது வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சினைகள். இந்த பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசாமல் அமைதியாக இருப்பது ஏன்?



    ரூபாய் நோட்டு விவகாரம், குழப்பம் நிறைந்த ஜிஎஸ்டி, சிறு குறு தொழில்களின் அவலநிலை குறித்து, பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்கள், குறிப்பாக பாஜகவைச் சேர்ந்தவர்களின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக பிரதமர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார். #Modi #Chidambaram #HateSpeeches

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குசாவடிக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு எந்திரத்தை பொருத்துவதில் தாமதம் ஆகிய குறைபாடுகள் உள்ளது.

    தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதில் காட்டும் அக்கறையை வாக்குச்சாவடிகளில் காட்டியிருந்தால் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டு இருக்காது. மதசார்பற்ற முற்போக்கு தலைமையிலான அணிகள் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வழங்கிவிட்டு, பின்னர் விசாரணையை நடத்துவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #Chidambaram #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள், வாக்காளர்களை வசப்படுத்த தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து கூறி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அவ்வகையில் நேற்று கோவையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்  மோடி, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரத்தை கடுமையாக சாடினார்.

    மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி (ப.சிதம்பரம்), தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் தங்கள் சொந்த இருப்புக்காக ஜாமீன் பெறுவது முக்கியம் என்றும் மோடி விமர்சித்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறியிருந்தார்.



    இதற்கு ப.சிதம்பரம் இன்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வரும். அதன்பிறகுதான் விசாரணை நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.

    “மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்காத வரை அவர் குற்றவாளிதான். மோடிக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவரது நண்பர் அருண் ஜெட்லியிடம் ஆலோசிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு சட்டம் தொடர்பாக சில அடிப்படை பாடங்களை சட்டத்துறை செயலாளர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஜாமீன் என்பது சட்ட விதிகளின் படி வழங்கப்படுவது, சிறை என்பது விதிவிலக்காக வழங்கப்படுவது, என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Chidambaram #PMModi
    ×