search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரத்தில் நள்ளிரவில் நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் சோடாபாட்டில் வீச்சு
    X

    சிதம்பரத்தில் நள்ளிரவில் நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் சோடாபாட்டில் வீச்சு

    நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் நள்ளிரவில் சோடாபாட்டில் வீசிய சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கமி‌ஷனராக இருப்பவர் சுரேந்தர்ஷா. இவரது வீடு சிதம்பரம் கனகசபை நகரில் உள்ளது.

    நேற்று இரவு சுரேந்தர்ஷா மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மணிதர்கள் சிலர் அங்கு வந்தனர். பின்பு அவர்கள் வீட்டின் மீது சோடாபாட்டில்களை சரமாரியாக வீசினர். இதில் சோடாபாட்டில்கள் சுவரில் பட்டு உடைந்து நொறுங்கின.

    இந்த சத்தம்கேட்டு நகராட்சி கமி‌ஷனர் சுரேந்தர்ஷா கதவை திறந்து வெளியேவந்து பார்த்தார். உடனே அங்கு நின்ற மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசில் சுரேந்தர்ஷா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து நகராட்சி கமி‌ஷனர் வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய மர்ம மனிதர்கள் யார்? எதற்காக வீசினர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×