search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm Laws"

    விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விவாதம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

    வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும், விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார். 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
    பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    பாராளுமன்றம் இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். காங்கிரசை சேர்ந்த பிரதீபா சிங், பா.ஜனதாவை சேர்ந்த ஜியானேஸ்வர் பட்டீல் ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். பிரதீபா சிங் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்தும், ஜியானேஸ்வர் பட்டீல் மத்திய பிரதேச மாநிலம் கன்வார் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், கல்யான் சிங், செங்குட்டுவன் உள்பட 8 பேருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அதன்பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மரணமடைந்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

    12 மணிக்கு பிறகு பாராளுமன்ற மக்களவை கூடியதும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவை மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

    உடனே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு இடையே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    பிரதமர் மோடி

    3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உள்ளதாக பிரதமர் மோடி கடந்த 19-ந் தேதி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்திலேயே இந்த சட்டத்தை ரத்து செய்யும்  மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது.

    முன்னதாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்.எஸ்.பி.) சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் கூறி உள்ளனர். இதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

    குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. இதற்காக ஒத்திவைப்பு தீர்மானத்தை தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு இன்று கொடுத்தார்.

    இதேபோன்று பல்வேறு கட்சிகளும் தங்கள் மாநில விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்று மனு கொடுத்தன.

    இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதேபோல மேல்சபை இன்று கூடியதும் ஒரு மணி நேரத்திற்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 5 பேருக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக புதிய எம்.பி.க்கள் அவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.






    குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார்.
    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சுமார் 3 வாரங்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று சபாநாயகர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    இதற்கு கடந்த 24-ந்தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார்.

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவில், ‘சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய வேளாண் சட்டங்கள் வழங்கின. ஆனால் சில விவசாய குழுக்கள் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் மத்திய அரசு முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

    விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக ஒன்றிணைத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. 

    நாளை பாராளுமன்றம்  கூடியதும், மக்களவையில் முதலில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதன் மீது எம்.பி.க்கள் விவாதம் நடத்துவார்கள். அதன் பிறகு மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்படும். அதன்பிறகு மாநிலங்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவார். அதன்பிறகு புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
    விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பிரதமருக்கு விவசாயிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான நடைமுறை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடங்கும் என கூறினார். ஆனால் விவசாயிகளோ வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி, போராட்டக் களங்களிலேயே முகாமிட்டுள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளான நவம்பர் 29ம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி, 60 டிராக்டர்கள், 1000 விவசாயிகள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் (நவம்பர் 29) விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    இதையடுத்து விவசாயிகள் பாராளுமன்றத்தை நோக்கி நடத்தவிருந்த பேரணியை ஒத்திவைத்துள்ளனர். வரும் 29ஆம் தேதி பாராளுமன்றத்தில் சட்டங்கள் நீக்கப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்திருப்பதால், பாராளுமன்றம் நோக்கிய பேரணியை ஒத்திவைத்திருப்பதாக விவசாய சங்க தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார்.

    ‘எங்களின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்க வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வேளாண் கழிவுகள் எரிப்பு வழக்குகள் மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அரசின் பதிலுக்காக டிசம்பர் 4ம் தேதிவரை காத்திருப்போம். அதன்பின்னர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து அறிவிப்போம்’ என்றும் தர்ஷன் பால் கூறினார்.

    வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள தயாராக இல்லை.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் தொடார் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான நடைமுறை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்றும் கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள தயாராக இல்லை. 

    வேளாண் சட்டங்களை வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முறைப்படி வாபஸ் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின்போது பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர். 

    விவசாயிகள் போராட்டம்

    இந்நிலையில்,  நவம்பர் 24 ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதாகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 29ம் தேதி தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. 

    வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின்போது தினசரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் சமீபத்தில் அறிவித்து இருந்தன.

    புதுடெல்ல:

    மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்களுடன் மத்திய அரசு  பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், தீர்வு ஏற்படாததால் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

    பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், உடனடியாக தங்கள் போராட்டத்தை முடித்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை. 3 வேளாண் சட்டங்களை வருகிற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முறைப்படி வாபஸ் பெறும்வரை தங்களது போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

    கோப்பு படம்

    மேலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விவசாய சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த அமைப்பின் தலைவர் தர்‌ஷன்பால் கூறும்போது, பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை முடித்துகொள்ள போவது இல்லை. ஏனெனில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இன்றுவரை அது செயல்படுத்தப்படவில்லை. இதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த சட்டங்களை வாபஸ் பெற்ற பின்னரே எங்கள் போராட்டத்தை நிறைவு செய்வோம் என்றார்.

    இந்த நிலையில் விவசாய சங்கங்கள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது.

    வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை பாராளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின்போது தினசரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்புகள் சமீபத்தில் அறிவித்து இருந்தன.

    இன்றைய கூட்டத்தில் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இதையும் படியுங்கள்... 4 கிலோ வரை உணவு உண்ணும் சாப்பாட்டு ராமனுக்கு ஓட்டல் செல்ல தடை

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் அறிவிப்பு அதிகார அகந்தையின் வீழ்ச்சி என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
    மும்பை:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இது தொடர்பாக சிவசேனா கட்சியின் நாளிதழான சாம்நாத் தனது தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    13 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பா. ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் ஞானம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி வேளாண் சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்தது. போராட்ட களத்தில் குடிநீர், மின்சார இணைப்புகளை துண்டித்தது. போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான்கள், பாகிஸ்தானியர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது.

    ஆனாலும் தங்கள் கோரிக்கைகளில் இருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. உத்தரபிரதேசத்தில் லக்பூரில் மத்திய மந்திரி மகன் சென்ற கார் மோதி விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

    விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை அறிந்தும் விரைவில் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட உள்ளதை உணர்ந்தும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

    மகாபாரதமும், ராமாயணமும் அகந்தை முழுமையாக நசுக்கப்படும் என்று போதிக்கின்றன. ஆனால் அதனை போலி இந்துத்துவா வாதிகள் மறந்து விட்டு ராவணனைப்போல் உண்மை மற்றும் நீதி மீது தாக்குதல் தொடுத்தனர்.

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் அறிவிப்பு அதிகார அகந்தையின் வீழ்ச்சி ஆகும். இனிமேலாவது இதுபோன்ற சட்டங்களை கொண்டு வரும் முன்பு மத்திய அரசு தனது அகந்தையை கைவிட்டு நாட்டு நலன் கருதி எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    காங்கிரசின் மூத்த தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்தது போலவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

    விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்று உள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்த போது, “இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றனர்.

    இதேபோல காங்கிரசின் மூத்த தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.

    இந்தநிலையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் இன்று நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி வெற்றி பேரணிகளை நடத்த முடிவு செய்தது.

    கோப்பு படம்

    மேலும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மெழுகு வர்த்தி அணிவகுப்பும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால் கூறும்போது, “அனைத்து மாநில கட்சி பிரிவுகளும் பேரணிகள் மற்றும் மெழுகு வர்த்தி அணிவகுப்புகளை மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் நடத்துமாறு கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் வரலாற்று வெற்றியாக கருதி தேசத்துடன் இணைந்து செயல்படும் நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் விவசாயிகளின் வெற்றி பேரணிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி இன்று அவர்கள் பேரணிகளை நடத்தினார்கள். வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நடனமாடி உற்சாகமாக சென்றனர். இனிப்புகளும் வழங்கப்பட்டது.

    விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்காக பிரார்த்தனைகளையும் செய்தனர்.

    இதையும் படியுங்கள்... சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை டோனி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது முதல், அவை திரும்பப்பெறுவது குறித்து நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு வரை ஒரு பார்வை.
    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகளிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தன. இதனால் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இந்தியாவையும் கடந்து சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

    குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பாடகரும், சூழலியல் ஆர்வலருமான ரிகன்னா, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் உறவினரான வக்கீல் மீனா ஹாரிஸ் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

    இவ்வாறு சர்வதேச அளவில் அறியப்பட்ட மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது முதல், அவை திரும்பப்பெறுவது குறித்து நேற்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு வரை ஒரு பார்வை.

    ஜூன் 5, 2020: வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பாக 3 அவசர சட்டம் பிறப்பிப்பு.

    செப்டம்பர் 14: அவசர சட்டங்களுக்கு மாற்றாக 3 திருத்த சட்ட மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அறிமுகம்.

    செப்டம்பர் 17: மக்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றம்.

    செப்டம்பர் 20: குரல் ஓட்டெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேறின.

    செப்டம்பர் 24: வேளாண் திருத்த மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் 3 நாள் ரெயில் மறியல் அறிவிப்பு.

    செப்டம்பர் 25: அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்.

    செப்டம்பர் 26: வேளாண் திருத்த மசோதாக்களை எதிர்த்து, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் விலகல்.

    செப்டம்பர் 27: வேளாண் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல். சட்டமாக அரசாணை வெளியீடு.

    நவம்பர் 25: பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணிக்கு அழைப்பு; கொரோனா விதிமுறைகளை சுட்டிக்காட்டி டெல்லி போலீசார் அனுமதி மறுப்பு.

    நவம்பர் 26: போலீசாரின் எதிர்ப்பை மீறி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி, அரியானா எல்லையில் போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்ட முயன்றதால் மோதல். டெல்லியை அடைந்தனர்.

    நவம்பர் 28: டெல்லியில் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா விருப்பம். ஆனால் விவசாயிகள் நிராகரிப்பு.

    டிசம்பர் 3: விவசாயிகளுக்கும், மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை. எந்த முடிவும் இன்றி நிறைவடைந்தது.

    டிசம்பர் 5: இரு தரப்பினருக்கு இடையே நடந்த 2-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி.

    டிசம்பர் 8: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) விவசாயிகள் அழைப்பு, பிற மாநில விவசாயிகளும் ஆதரவு.

    டிசம்பர் 9: 3 சட்டங்களிலும் திருத்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் பரிந்துரையை விவசாயிகள் நிராகரிப்பு. 3 சட்டங்களையும் திரும்பப்பெறுமாறு ஜனாதிபதியை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தல்.

    டிசம்பர் 11: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.

    டிசம்பர் 30: விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் லேசான முன்னேற்றம்.

    ஜனவரி 4, 2021: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால் இரு பிரிவினருக்கும் இடையே நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி.

    ஜனவரி 11: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி.

    ஜனவரி 12: 3 சட்டங்களுக்கும் தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக 4 நபர் குழுவையும் அமைத்தது.

    டிராக்டர் அணிவகுப்பு

    ஜனவரி 26: குடியரசு தினத்தில் செங்கோட்டை நோக்கி விவசாயிகள் நடத்திய டிராக்டர் அணிவகுப்பில் வன்முறை வெடித்தது. ஒருவர் சாவு.

    ஜனவரி 29: வேளாண் சட்டங்களை 1½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், இந்த சட்டங்களை மறுஆய்வு செய்ய கூட்டுக்குழு ஒன்றை அமைக்கவும் மத்திய அரசு பரிந்துரை. ஆனால் இதை விவசாயிகள் நிராகரித்தனர்.

    பிப்ரவரி 6: நாடு முழுவதும் விவசாயிகள் 3 மணி நேரம் சாலை மறியல்.

    மார்ச் 6: விவசாயிகளின் டெல்லி போராட்டம் 100 நாட்களை நிறைவு செய்தது.

    ஏப்ரல் 15: விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு அரியானா துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதலா பிரதமர் மோடிக்கு கடிதம்.

    மே 27: விவசாயிகளின போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்ததையொட்டி விவசாயிகள் கருப்பு தினம் அனுசரிப்பு.

    ஜூலை 22: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி, நாடாளுமன்றத்துக்கு அருகே விவசாயிகளும் கிசான் சன்சாத் என்ற பெயரில் ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ நடத்தினர்.

    அக்டோபர் 22: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் உரிமை விவசாயிகளுக்கு இருந்தாலும், காலவரையின்றி சாலைகளை முடக்குவதை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து.

    அக்டோபர் 29: காசிப்பூர், திக்ரி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் போடப்பட்டிருந்த தடைகளை போலீசார் அகற்றினர்.

    நவம்பர் 19: நாடு முழுவதும் ஓராண்டுக்கு மேலாக சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 3 சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.



    கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.
    புதுடெல்லி :

    விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல.

    கடந்த 2014-ம் ஆண்டு, முதல்முறையாக மோடி ஆட்சிக்கு வந்தபோதே முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 முக்கிய திருத்தங்களை கொண்டு வந்து, அதை அவசர சட்டமாக பிறப்பித்தது.

    வேளாண் சட்டங்களுக்கு எழுந்த எதிர்ப்பை போலவே, இந்த அவசர சட்டத்துக்கும் அப்போது எதிர்ப்பு எழுந்தது. ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு உள்பட பெரும்பாலான விவசாய சங்கங்கள், இது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன.

    அப்போதைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலி தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. காந்தியவாதி அன்னா ஹசாரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.

    வழக்கம்போல், பிரதமர் மோடி அந்த அவசர சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் எதிர்ப்புகள் அடங்கவில்லை.

    அதே சமயத்தில், இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் அளிப்பதற்காக, 2015-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் அம்மசோதா நிறைவேறி விட்டது. ஆனால், பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது.


    வேளாண் சட்டங்களை பாராளுன்றம் ரத்து செய்யும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகளில் ஒரு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    மோடியின் அறிவிப்பையடுத்து விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். போராட்டக்களங்களில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் உற்சாகத்தில் நடனமாடினர். பெரும்பாலான போராட்டக்காரர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

    எனினும், ஒருசில விவசாயிகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை பாராளுன்றம் ரத்து செய்யும்வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்கள் தவிர மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, ஒரு வருடமாக தங்களின் இல்லமாக மாறிய போராட்ட களங்கள் காலி செய்யப்படாது என விவசாயிகள் சிலர் கூறுகின்றனர். சட்டத்தை முறைப்படி ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஹர்தீப் சிங் என்ற போராட்டக்காரர் தெரிவித்துள்ளார்.
    3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ள மத்திய அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    கொல்கத்தா:

    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாஜக, உங்களுக்கு செய்த கொடுமையால் துவண்டு போகாமல், இடைவிடாமல் போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

    இவ்வாறு அவர் கூறினார்.  

    இதையும் படியுங்கள்.. தேர்தல் பயத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்- ப.சிதம்பரம் கருத்து
    ×