search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகர்"

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.

    மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாரதிய ஜனதாவை தேசிய அளவில் வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், லல்லு பிரசாத், சரத்பவார் போன்ற தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ஆனால் மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதில் பல மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதுவரை அவர் மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரசேகர், அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் உள்பட பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவையும் அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஓரணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் இறுதி வடிவம் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் அரசியல் வல்லுனர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் திரளும் நிகழ்ச்சி ஜூன் 12-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்டமான கூட்டம் நடைபெற உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நிதிஷ்குமார் அழைத்து உள்ளார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்வார்கள்.

    என்றாலும் எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் விஷயத்தில் சில சிக்கல்களையும் நிதிஷ்குமார் சந்தித்து வருகிறார். பாரத் ராஷ்டீரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரை இன்னமும் நிதிஷ்குமாரால் சமரசம் செய்ய இயலவில்லை.

    என்றாலும் ஒருமித்த கருத்துக்களுடன் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா 38 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.

    மீதமுள்ள 62 சதவீத வாக்குகளை பிரிந்து கிடந்த எதிர்க்கட்சிகள் பெற்று இருந்தன.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்று நிதிஷ்குமார் கருதுகிறார். குறிப்பாக மொத்தம் உள்ள 543 எம்.பி. தொகுதிகளில் குறைந்தபட்சம் 450 தொகுதிகளிலாவது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    450 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக பாரதிய ஜனதாவை தனி பெரும்பான்மை பெறவிடாமல் செய்ய முடியும் என்று நிதிஷ்குமார் மாநில கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார். ஆனால் மாநில கட்சி தலைவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிராக இருப்பதால் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமா? என்று சந்தேகம் நீடிக்கிறது.

    • தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர் சந்திரசேகர்.
    • உடல்நலக்குறைவு காரணமாக சந்திரசேகர் காலமானார்.

    பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றிய சந்திரசேகர், பிரபல டிரம்மர் இசைக்கலைஞர் புருஷோத்தமனின் அண்ணன் ஆவார். இவர்கள் இருவரும் இளையராவின் இசையில் பல படங்களில் இசைக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர். மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற "வசந்தகால நதிகளிலே" பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும், பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற "இளையநிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசை வாசித்தும் ரசிகர்களிடையே சந்திரசேகர் புகழ் பெற்றார்.

    1995-ஆம் ஆண்டு முதல் பல விளம்பர படங்களுக்கு பணியாற்றிய சந்திரசேகர், தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இசைகலைஞர் சந்திரசேகர் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இசைப் பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
    • 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    கோவில்பட்டி:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பிறகும் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தலின் போதும், குறைவெண் வரம்பின்மை, கோர்ட்டு வழக்கு மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஆகிய காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் காரணமாக 31.7.22 வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கும் மறைமுக தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.

    தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக இருந்த செல்வக்குமார் பதவி விலகியதால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு தேர்தல் நடந்தது.

    போட்டியின்றி தேர்வு

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜெயசீலி முன்னிலையில் தேர்தல் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 17 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதைத் தொடர்ந்து 7-வது வார்டு உறுப்பினர் க.சந்திரசேகர் துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை 2-வது வார்டு மிக்கேல் நவமணி முன்மொழிந்தார். 4-வது வார்டு தங்கமாரியம்மாள் வழி மொழிந்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக க.சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    வாழ்த்து

    இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் சந்திரசேகர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் துணைத்தலைவர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×