search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natarajar Temple"

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் 5 வீதியுலா உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கடலூர்:

    பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்திப்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும் தேரோட்டத்து டன் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுக்களாக கொரோனா தொற்று காரணமாக ஆனிதிருமஞ்ச திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (27-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள்வீதியுலா நடந்தது. அதன்பின்னர் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் நகரின் 4 வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை நடராஜர், சிவகாமசுந்தரி, முருகர், விநாயகர், சண்டி கேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு 4 மாட வீதிகளிலும் வலம்வரும். அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பார்கள். அன்றிரவு தேர் நிலைக்கு வந்தவுடன்நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படுவார்கள் பின்னர் அன்று இரவுலட்சார்ச்சனை நடைபெறும். 6-ந் அதிகாலையில் நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் பல்வேறு அர்ச்சனைகள், திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் 5 வீதியுலா உள்ளிட்டபல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியப்டியே வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனமாக காட்சியளித்து சித்சபைக்கு செல்வார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா 27-ந் தேதி தொடங்குகிறது.

    கடலூர்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 28-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 29-ந் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 30-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, ஜூலை 1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6-ந் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு
    • பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

    சிதம்பரம்:

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருந்தனர். அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் பொது தீட்சிதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் கோரிக்கைகளின் நிலைப்பாடுகளையும், அரசின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டோம் என்றார்.

    அனைவருக்கும் சமமான நீதி வழங்க வேண்டும், அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படாமல் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×