என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chhattisgarh"
- யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐந்து மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்ற ரீதியில் கருத்து கணிப்புகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தனியார் நிறுவனம் (லோக் போல்) நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 56 முதல் 60 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
பா.ஜ.க. கட்சி 25 முதல் 29 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பி.எஸ்.பி. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் இதர வேட்பாளர்கள் ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது. இதே போன்று தெலுங்கானா மாநிலத்திலும் அதிகபட்சம் 44 சதவீத வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 61 முதல் 67 இடங்களிலும், பி.ஆர்.எஸ். கட்சி 45 முதல் 51 இடங்களிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆறு முதல் எட்டு இடங்களிலும், பா.ஜ.க. இரண்டு அல்லது மூன்று இடங்களிலும், இதர வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது.
- மாநிலம் முழுக்க வேலையில்லா இளைஞர்களுக்கு சத்தீஸ்கர் அரசு வழங்கும் உதவித்தொகை திட்டம் அமலுக்கு வருகிறது.
- ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து இந்த உதவித்தொகை பெற ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கும் திட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது. சத்தீஸ்கர் அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேலையில்லாமல் தவிப்போருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை பெறுவோரின் குடும்ப வருவாய் ஆண்டிற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் அதிகபட்சம் ஒருவர் மட்டுமே இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும்.
மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோருக்கு அந்த ஆண்டு முழுக்க வேலை கிடைக்கவில்லை எனில், உதவித்தொகை திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்து, அதனை மறுத்து இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உதவித்தொகை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப்பரேவை பட்ஜெட்டில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை ராணுவ படை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கி இருந்தனர். இரவு நேரம் என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பணியில் இருந்த ஒரு வீரர் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் 4 வீரர்கள் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கி பிடித்தனர்.
அவரை உயர் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என்று உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
காயம் அடைந்த வீரர்கள் உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மத்திய படை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதிக்குட்பட்ட அட்டல் நகரில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
ஓட்டுனர் மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chhattisgarhcaraccident
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.
சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet
ராய்ப்பூர்:
பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
ராஜஸ்தான் முதல்- மந்திரியாக அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் ஆகியோர் நேற்று அந்தந்த மாநில தலைநகர்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் மந்திரிகள் பதவி ஏற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி மத்திய பிரதேசத்தில் நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலில் விவசாய கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல்லும் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1700-ல் இருந்து ரூ.2500ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
“சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணி தலைவரான நந்தகுமார் படேல் உள்பட 29 காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் வரலாற்றில் நடந்தது இல்லை. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் உறுதி அளித்தார். #ChhattisgarhCM
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்