search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unemployed"

    • மாநிலம் முழுக்க வேலையில்லா இளைஞர்களுக்கு சத்தீஸ்கர் அரசு வழங்கும் உதவித்தொகை திட்டம் அமலுக்கு வருகிறது.
    • ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து இந்த உதவித்தொகை பெற ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கும் திட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது. சத்தீஸ்கர் அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வேலையில்லாமல் தவிப்போருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை பெறுவோரின் குடும்ப வருவாய் ஆண்டிற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருப்பது அவசியம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் அதிகபட்சம் ஒருவர் மட்டுமே இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும்.

     

    மந்திரிகள், முன்னாள் மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, மாநகராட்சி தலைவர்கள், முன்னாள் தலைவர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவோருக்கு அந்த ஆண்டு முழுக்க வேலை கிடைக்கவில்லை எனில், உதவித்தொகை திட்டம் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்து, அதனை மறுத்து இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் அதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உதவித்தொகை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.

    மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப்பரேவை பட்ஜெட்டில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் அடுத்த நிதியாண்டில் இருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். 

    • மதுரை மாவட்டத்தில் படித்து முடித்து வேலை இல்லாதோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழக அரசின் வேலை வாய்ப்பு துறை சார்பில் படித்து முடித்து வேலை இல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

    அதன்படி வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்த பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் குடும்ப வருமானம் உடையோர், 45 வயதுக்கு உட்பட்ட பட்டியல் இனத்தவர், 40 வயது இதர வகுப்பினர் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறுபவர் தமிழகத்தில் பள்ளி-கல்லூரி படித்து இருக்க வேண்டும். ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது.

    அரசு மூலம் நிதி உதவி பெறுபவராக இருக்கக் கூடாது. பள்ளி- கல்லூரிக்குச் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிந்த- எழுத படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் வருமானம், வயது வரம்பின்றி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில் கல்வி படித்தவர்கள் உதவித் தொகை பெற இயலாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிந்தவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 359 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடங்கி வைத்தார். முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு, 359 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார். 32 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலெக்டருக்கு அளிக்கப்படும் தன்விருப்ப நிதியினை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் பெறுவதற்காக பயன்படுத்தி வருகிறோம். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கக்கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மென்மேலும் முன்னேறி வெற்றிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து ‘பைக் டாக்ஸி’ திட்டத்தில் முன்பதிவு செய்து மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்திட ‘மா உலா’ என்ற செல்போன் செயலியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வேலூர் மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனர் பாஷித், தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×