search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job Order"

    • 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பம்.
    • 439 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஷாநவாஸ், நாகை மாலி, தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற முகாமில் ஆர்வத்துடன் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முகாமில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ராயல் என்ஃபீல்டு, டாட்டா, ஆதித்யாபிர்லா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

    நாகை மாவட்டத்தில் 3488 நபர்கள், அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 186 நபர்கள் என 3674 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 978 நபர்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு, அதில் 439 நபர்களுக்கு உடனடியாக பணியானை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 33 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் நிதி உதவியை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. #SathyabamaUniversity #CampusInterview
    சென்னை:

    சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் வளாகத் தேர்வை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் நடந்த வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.



    நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கவுரவித்தார்கள். காஃக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார்.

    வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த மாணவர்களில் 91.2 விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன. இந்த 267 நிறுவனங்களில் 63 நிறுவனங்கள் மாணவர்களின் உலகத்தரம் வாய்ந்த கனவு நிறுவனங்களாக உள்ளன.

    புதிய உச்சமாக 186 மாணவர்கள் ரூபாய் 4.5 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.

    வேலைவாய்ப்பு வளாகத் தேர்வின் முக்கிய அம்சங்கள்:

    1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு ரூ.18 இலட்சம்

    2. சராசரி ஆண்டு ஊதியம் ரூ.3.5 இலட்சம்

    3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

    4. எச்சிஎல் நிறுவனம் 100 மாணவர்களுக்கு ரூ.4.75 இலட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒற்றைக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட உச்ச எண்ணிக்கை ஆகும்.

    காக்சிசன்ட், விப்ரோ, டிசிஎஸ், நீல்சன், அமேசான், ஹிட்டாச்சி, டைட்டன், எச்சிஎல், ஆரக்கிள், வெரைசான், டாடா கம்யூனிகேசன்ஸ், ரெனால்ட் நிசான், கோட்டக், போஸ்ச், யமஹா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வளாகத்தேர்வில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. #SathyabamaUniversity #CampusInterview
    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 359 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடங்கி வைத்தார். முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு, 359 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார். 32 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலெக்டருக்கு அளிக்கப்படும் தன்விருப்ப நிதியினை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் பெறுவதற்காக பயன்படுத்தி வருகிறோம். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கக்கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மென்மேலும் முன்னேறி வெற்றிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து ‘பைக் டாக்ஸி’ திட்டத்தில் முன்பதிவு செய்து மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்திட ‘மா உலா’ என்ற செல்போன் செயலியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வேலூர் மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனர் பாஷித், தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×