என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நியமன ஆணை"

    • 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
    • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தொடங்கி வைத்தார்

    சோளிங்கர்:

    சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார்.

    உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குனர் நானிலதாசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    வேலை வாய்ப்பு முகாமில் 290-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 102 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்குப்பட்டு ராமன், நதியா மதன்குமார், மாரிமுத்து, சுப்பிரமணி மற்றும் வட் டார இயக்க அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
    • பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும்.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

    யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அதன்படி இதுவரை 2 கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் மத்திய அரசின் கீழ் இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர், தட்டச்சர், இளநிலை கணக்காளர், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருகிறார்கள்.

    இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கு உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலை வாய்ப்பு திட்டமாகும். இது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புக்கு உந்துதலாக அமைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    • கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.
    • வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவல கத்தில், வருவாய் அலகில், பணியிலிருக்கும் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.அப்போதுஅவர் கூறியதாவது:- 

    தமிழ்நாடு முதல்- அமைச்சர், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களிடம் கொண்டு செல்வதற்கு பெரும் உறுதுணையாக இருப்பது அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவார்கள். இவ்வாறு அரசு அலு வலகங்களில் பணிபுரியும் அலுவலரோ அல்லது பணியாளரோ யாரேனும் பணியில் இருக்கும் போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினை பாது காத்திடும் வகையில் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், வருவாய் அலகில், பணியாற்றி வந்த 6 கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 3 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 3 கிராம உதவியாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், தனித்துனை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் விஸ்வநாதன், துணை கலெக்டர் (பயிற்சி) லாவண்யா உட்பட பலர் உள்ளனர்.

    • 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
    • கல்லுாரி முதல்வர் வழங்கினார்.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக வளாக நேர்காணல் தேர்வு நடைபெற்றது. அப்போது பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன அழைப்பு கடித்தை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு புல ஒருங்கிணைப்பாளர் ம.ராசமூர்த்தி செய்திருந்தார்.

    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
    • 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 225 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையார் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 3 பேரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து, அவர்களின் கேரரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது, 3 சக்கர சைக்கிள் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, உடனடியாக அவரது மனுவினை பரிசீலனை செய்த கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,500 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை மாற்றுத்திறனாளிக்கு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

    கூட்டத்தில் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து, கரட்டுப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரட்டுப்பட்டி கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, கோவில் முன், பந்தல் அமைத்தோம். அப்போது, ஒரு சிலர் வந்து, தடுத்ததுடன், அப்பகுதி, அவர்களுக்கு பாத்தியப்பட்டது, எனவே கோவிலை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் உதவியுடன் பந்தல் அமைத்தோம்.

    எங்கள் பகுதியில் உள்ள சிலர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து, வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும், எங்கள் கோவிலுக்கு பட்டா வழங்குவதுடன், அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன்.
    • இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், சென்னை, சேலம் ,கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 65 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்த 1,365 பேரில், 339 பேருக்கு தேவையான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 5- வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 468 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய முகாமில் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்ற முகாம்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். நானும் ஒரு பி.இ., பட்டதாரி. படித்து முடித்தவுடன், எத்தனையோ தகவல்களை தெரிந்து நேர்காணலுக்கு செல்லும் போது, சில இடங்களில் சோபிக்க தவறியது உண்டு. 10 நேர்காணலை சந்தித்து அதில், இரண்டில் தேர்வான நிலை இருந்தது. பெங்களூரில் பணியாற்றிய போது எனக்கு வேலை பிடிக்கவில்லை. பின்னர் வங்கி, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளிலும் பணியாற்றினேன். மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி நிறுவனம், வேலைவாப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த 46 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், அரசு மகளிர் கலைகல்லூரி முதல்வர் கோவிந்தராசு, கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி மன்றத்த தலைவர் காயத்ரிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • 1,314 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
    • வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களில் படித்த 1,314 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற் றார். வேலை வாய்ப்பு துறை அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், கோவை சி.டி.எஸ். இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு 1,314 மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.

    அதற்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவ-மாணவிகள் பொறியியல் பட் டம் படித்து முடிக்கிறார்கள். இதில் 20 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே என்ஜினீயரிங் தொடர்பான வேலை கிடைக்கிறது. மற்ற 80 சதவீதம் பேர் பல்வேறு துறைகளில் வேலைகள் பெறுகிறார்கள். இதனை தவிர்த்து என்ஜினீயரிங் துறையில் வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் டீன் மாரிசாமி, பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரம ணியன், பி.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுந்தராஜன், பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பரங்கிரி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்புத்துறை பேரா சிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

    • பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
    • ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார் பிரதமர்

    புதுடெல்லி:

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

    யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி. எனப்படும் சரக பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றின் மூலம் இந்த பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அதன்படி இதுவரை 3 கட்டங்களாக சுமார் 2.18 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று வழங்கினார். பின்னர் பணி நியமன ஆணை பெற்றவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது, ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டமும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று கூறிய அவர், துறைமுகத் துறை மற்றும் சுகாதாரத் துறை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றார். விவசாயத் துறையில் பண்ணை இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    • கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னில் கல்லூரியில் இந்த ஆண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தந்து வளாகத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக் சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வரும், வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளாகுமான ஷேக் தாவூது 2023 ஆண்டுக்குரிய வேலை வாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த வளாகத் தேர்வுகள் மூலம் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 605 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இங்கு பயிலும் எந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, மெரைன் என்ஜினீயரிங், கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் எந்திரவியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக், கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.கல்லூரி துறைத் தலை வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஷேக் தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பணிநியமன ஆணைகளை மாணவர்கள் பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.
    • வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற வளாகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.தங்கபழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பிரபல முன்னணி நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 242 மாணவர்கள் பணிநியமன ஆணைகளை பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டிதயன் அவசியம்,வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் பணிநியமனம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் காவல்துறையில் பணிபுரிய 11 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
    • மாவட்ட எஸ்.பி. ஷ்யாமளாதேவி வழங்கினார்

    பெரம்பலூர்,

    தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கான எழுத்து தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் மருத்துவ சோதனைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடித்து தகுதியுள்ள நபர்களை தமிழக காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 11 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தகுதி பெற்ற 11 நபர்களில் 3 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும், பெரம்பலூர் எஸ்.பி. ஷ்யாமளாதேவி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்களி 9 பேர் மாவட்ட சேமநலப்படை, 2 பேர் தமிழக சிறப்பு காவல்படையில் பணிபுரிவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.

    • பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் பணியின்போது விஜயபாபு என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை கலெக்டர் கற்பகம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாஹீர் உசேன், செயல் அலுவலர் சதீஸ் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×