search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 339 பேருக்கு பணி நியமன ஆணை
    X

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 339 பேருக்கு பணி நியமன ஆணை

    • மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன்.
    • இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், சென்னை, சேலம் ,கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 65 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்த 1,365 பேரில், 339 பேருக்கு தேவையான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 5- வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 468 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய முகாமில் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்ற முகாம்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். நானும் ஒரு பி.இ., பட்டதாரி. படித்து முடித்தவுடன், எத்தனையோ தகவல்களை தெரிந்து நேர்காணலுக்கு செல்லும் போது, சில இடங்களில் சோபிக்க தவறியது உண்டு. 10 நேர்காணலை சந்தித்து அதில், இரண்டில் தேர்வான நிலை இருந்தது. பெங்களூரில் பணியாற்றிய போது எனக்கு வேலை பிடிக்கவில்லை. பின்னர் வங்கி, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளிலும் பணியாற்றினேன். மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி நிறுவனம், வேலைவாப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த 46 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், அரசு மகளிர் கலைகல்லூரி முதல்வர் கோவிந்தராசு, கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி மன்றத்த தலைவர் காயத்ரிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×