பணியின் போது உயிரிழந்த 6 வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைவிழுப்புரம் கலெக்டர் வழங்கினார்

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
பணியின் போது உயிரிழந்த 6 வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைவிழுப்புரம் கலெக்டர் வழங்கினார்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவல கத்தில், வருவாய் அலகில், பணியிலிருக்கும் போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கி னார்.அப்போதுஅவர் கூறியதாவது:- 

தமிழ்நாடு முதல்- அமைச்சர், அரசின் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களிடம் கொண்டு செல்வதற்கு பெரும் உறுதுணையாக இருப்பது அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவார்கள். இவ்வாறு அரசு அலு வலகங்களில் பணிபுரியும் அலுவலரோ அல்லது பணியாளரோ யாரேனும் பணியில் இருக்கும் போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினை பாது காத்திடும் வகையில் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டம், வருவாய் அலகில், பணியாற்றி வந்த 6 கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 3 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 3 கிராம உதவியாளர் பணி கருணை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், தனித்துனை கலெக்டர் சமூக பாதுகாப்புத்திட்டம் விஸ்வநாதன், துணை கலெக்டர் (பயிற்சி) லாவண்யா உட்பட பலர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com