search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polytechnic College"

    • கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னில் கல்லூரியில் இந்த ஆண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தந்து வளாகத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக் சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வரும், வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளாகுமான ஷேக் தாவூது 2023 ஆண்டுக்குரிய வேலை வாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த வளாகத் தேர்வுகள் மூலம் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 605 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இங்கு பயிலும் எந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, மெரைன் என்ஜினீயரிங், கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் எந்திரவியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக், கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.கல்லூரி துறைத் தலை வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஷேக் தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு நடத்திய ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
    • தென்தமிழத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் 45 பேர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பும் மற்றும் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் புதுமை அமைப்பின் 5-வது மண்டலமும் இணைந்து நடத்திய ஆசிரியர்கள் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.

    இதன் தொடக்க விழா லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி கருத்தரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் மற்றும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விக்னேஷ்வரி ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து தலைமையுரை யாற்றினர். முன்னதாக, தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் புதுமை அமைப்பின் 5-வது மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் வரவேற்று பேசினார்.

    3 நாட்கள் பயிற்சி முகாமில் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் நிகழ்ச்சியின் புதுமை அமைப்பின் முதுநிலை பயிற்சியாளர் டாக்டர் திலீபன்குமார் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி ஆகியோர் கலந்து கொண்டு "தொழில்முனைவோர் யார்? தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவோருக்கு தேவைப்படும் திறமைகளை வளர்த்தல், தொழில் மாதிரிகள், அறிக்கை தயார் செய்தல், அரசு சலுகைகள் மற்றும் பொருட்களை சந்தை படுத்துதல்" போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதன் நிறைவு விழா கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் தலைமை உரையாற்றினார். இதில் நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ேபசினார். முன்னதாக தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் புதுமை அமைப்பின் 5-வது மண்டல கள ஒருங்கிணைப்பாளர் சண்முக மாரியப்பன் வரவேற்று பேசினார். நிறைவாக ஆட்டோ மொபைல் துறை தலைவரும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுடலைக்கண்ணு அவர்கள் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் தென்தமிழத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் 45 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆலோசனையின்படி, கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலில் தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பளர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.

    கோவை:

    கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டி ற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானி க்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புரோடக்ஷன் என்ஜினீயரிங், இ.சி.ஜி டெக்னாலஜி ஆகிய 7 படிப்புகள் வழங்கப்படுகிறது.

    இதற்கு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் சேர பிளஸ்-2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர பட்டய சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ 2 வருடம் இருக்க வேண்டும். இது 4 ஆண்டு படிப்பாகும்.

    இந்த படிப்புகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.150, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் விண்ணப் பணத்தை செலுத்தலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 8-ந் தேதி கடை நாளாகும்.

    மேலும், கோவை பீளமேடு அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் பிரிவு தமிழ் வழியில் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இ.சி. ஜி டெக்னாலஜி என்ற புதிய பாடப்பிரிவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்கள் உள்ளன.

    இவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும். தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும். ஆண்டு கட்டணம் ரூ.2,500க்கு கீழ் இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தெரிவித்தார்.

    • பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் வரும் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிணி பொறி யியல் என 5 முழுநேரப் பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக்கட்டணமாக கிரிடிட் கார்டு, டேபிட் கார்டு,நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். பழங்குடி-பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக்கட்டணம் இல்லை.

    முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி 2-ம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பி யல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும்.

    இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கொருக்கை அரசு பாலிடெக்னிக்கில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரமோகன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் மரம் நட்டு தொடங்கி வைத்தார். ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன் தலைமை தாங்கி மரம் நட்டு, மரம் நடுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.

    சென்னை அன்னை பழமுதிர்ச்சோலை நிறுவனர் முனைவர் அரிமா.ரவிச்சந்திரன், கொறுக்கை ஊராட்சி மன்றத் தலைவர்ஜானகிராமன், கல்லூரி கண்காணிப்பாளர் குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து மரம் நட்டனர்.

    கொறுக்கை பணித்தள பொறுப்பாளர் சாவித்திரி , மன்ற உறுப்பினர் கலாவிஜேந்திரன் மற்றும் கல்லூரியை சேர்ந்த அனைத்து பேராசிரியர்களும், கொறுக்கை வாழ் மக்கள் 72 பேரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அனைவருக்கும் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

    ×