search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்லூரியில் பணி நியமன ஆணை
    X

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்லூரியில் பணி நியமன ஆணை

    • பணிநியமன ஆணைகளை மாணவர்கள் பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.
    • வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்ற வளாகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.தங்கபழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமநாதன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள பிரபல முன்னணி நிறுவனங்களில் நிரந்தரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 242 மாணவர்கள் பணிநியமன ஆணைகளை பெற்றோருடன் வந்து பெற்றுக்கொண்டனர்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டிதயன் அவசியம்,வேலை வாய்ப்புக்கான திறமைகளை வளர்த்தல் பற்றி கல்லூரி முதல்வர் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் பணிநியமனம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×